புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு!

Filed under: அரசியல்,தமிழகம் |

புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு!

சென்னையில் பணியாற்ற புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்றையை நாள் வரையிலான பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ தாண்டியுள்ளது. மேலும் தினசரி 1000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் அதிக நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட கூடும்.  இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பும் சூழ்நிலை உருவாகலாம்.  இதையடுத்து தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக 1550 பட்ட மேற்படிப்பு மருத்துவர்களை சென்னையில் பணியமர்த்தப் போவதாக ஜூன் 5 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 மாதங்களுக்கு சென்னையில் தங்கி சிகிச்சையளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.