புதுவையில் 747 குழந்தைகள் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

மிக வேகமாக புதுவையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுவையில் இன்புளுயன்சா என்ற காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குழந்தைகளுக்கு மிக வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை புதுவையில் 747 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய நல வழி மையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதையடுத்து காய்ச்சிய குடிநீரை பருகும்படி புதுவை அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்த புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை அளிக்க புதுவை அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.