மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர் சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஜூன் 19

தினபூமி நாளிதழில் நிருபராக பணியை தொடங்கி  பத்திரிகைத்துறையில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றியவர் சிவகுமார் (வயது 49). மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியராக பணியாற்றிய சிவகுமார் மொழிப்பெயர்ப்புத் திறமை மிக்கவர்.

பழகுவதற்கு இனிய சிவகுமார் இன்று (19/06/2020) காலை தஞ்சாவூரில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் அன்னை சிவகாமி நகரில் உள்ள இல்லத்தில் இறுதிமரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது
இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன
மறைந்த சிவகுமாருக்கு மீனாம்பிகா என்ற மனைவியும் அபை என்ற மகனும் உள்ளனர்.

மூத்த பத்திரிகையாளர் சிவகுமாரின் மரணம் நம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. சிவகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரது துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம் என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.