அமைச்சர் மெய்யநாதன் புதிய தகவல்!

Filed under: சென்னை,விளையாட்டு |

செஸ் ஒலிம்பியாட் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தற்போது மீண்டும் சர்வதேச போட்டி ஒன்று நடைபெற போவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப் போவதாக இருப்பதாகவும், நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12ம் தேதி சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி துவங்க இருப்பதாகவும் ஒரு வாரம் இப்போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக உலகத்தரத்தில் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டி போல் மக்களிடம் டென்னிஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளவும் தமிழ்நாடு டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சி செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.