10ம் வகுப்பு வினாத்தாள் விவகாரம்: பாஜக பிரமுகர் கைது!

Filed under: இந்தியா |

பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தெலுங்கான மாவட்டத்தில் நடைபெற்ற வருகிறது.

இத்தேர்வில் இந்தி பாடத்தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் இந்தி தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு இந்தி பாடத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கமலாபூர் என்ற தேர்வு மையத்தில் இருந்து பாஜக பிரமுகர் புரம் பிரசாத் என்பவர் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை பண்டி சஞ்சய் என்பவருக்கு வினாத்தாளை அனுப்பி உள்ளதாகவும் இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.