மத்திய அரசு உத்தரவு

Filed under: இந்தியா |

மத்திய அரசு உணவகங்களில் சேவை கட்டணம் ஏதும் விதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வசூலிக்கப்படுகிறது. இப்படி வசூலிக்கப்படும் எந்த சேவை கட்டணமும் அரசுக்கு செல்வதில்லை. சேவை கட்டணத்தை உணவகங்களில் வசூலிக்கக்கூடாது என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதையும் மீறி பல உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உணவகங்களில் ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது. அப்படி வசூலித்தால் 1915 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.