250 கி.மீ தூரத்திற்கு டிராக்டர்கள் பேரணி :விவசாயிகள் திட்டம் !

Filed under: இந்தியா |

250 கி.மீ தூரத்திற்கு டிராக்டர்கள் பேரணி: விவசாயிகள் திட்டம்! மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டு உள்ளதுஇந்த நிலையில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நேரத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணி நாளை 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராக்டரில் அணிவகுக்க விவசாயிகள் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து டிராக்டர்கள் தலைநகரை நோக்கி படை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனால் தலைநகர் டெல்லி பகுதியில் எங்கு பார்த்தாலும் டிராக்டர் மயமாக இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த டிராக்டர் பேரணியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன