சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயார் – மைக் பாம்பியோ காட்டம்!

Filed under: உலகம் |

பூட்டான் நாட்டுக்கு சொந்தமான பகுதியை உரிமை கொண்டாடுவதும் மற்றும் இந்தியா எல்லையில் அத்துமீறுவதும் போன்ற கொடிய செயல்களை செய்து சீனா உலக நாடுகளை சோதித்து பார்க்கும் செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகள் மீது மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு உலக நாடுகள் எவ்வாறு எதிர்ப்பை காட்டுகிறது என சீனா தெரிந்து கொள்வதற்கு முயற்சிகள் செய்து வருகிறது என அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஆனால், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக இருக்கிறது. நான் நம்பிக்கை உடன் இருக்கிறேன். இத்தகைய பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டு உறுதியுடன் தயாராக வேண்டும் எனவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.