சீனாவின் ஏவுகணைகளை கொண்டு அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலுக்கு எச்சரிக்கை விடுப்பு!

Filed under: உலகம் |

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில், தென்சீனா கடலில் விமானம் தாங்கி கப்பலை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் கூறப்படுகிறது.

தென்சீனா கடலுக்கு சீனா நாடு உரிமை கொண்டாடும் விவகாரத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவிப்பதால் இரண்டு நாடுகளும் இடையே பதற்றம் நிலவும் நிலை இருந்து வருகிறது.

தற்போது சீனா கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருந்த சமயத்தில், அமெரிக்கா நாட்டின் உளவு பார்க்கும் விமானம், பார்ப்பதற்கு தடைவிதித்த பகுதியில் அனுமதி இல்லாமல் பறந்ததாக சீனா குற்றம்சாட்டியது.

இதனிடையே அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில், சீனா தென்சீனா கடலில் DF-26B, DF-21D ஆகிய இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில் DF-21D ஏவுகணை கப்பலை அழிக்கும் திறனை கொண்டதாக கூறப்படுகிறது.