திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்.

Filed under: தமிழகம் |

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்.

முன்னதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேட்பாளர் ஜான்சி ராணி, திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்லா முத்துச்சோழன், திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் 2-வது மருமகள்.

2016 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். திமுகவில் வடசென்னை பகுதி பிரசாரக் குழு செயலாளராக இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன் அவர் அதிமுகவில் இணைந்தார் இந்த நிலையில் தான் சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.