Home » Entries posted by admin (Page 64)
Entries posted by admin

இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரிவேந்தரின் சூப்பர் அல்வா!!!

Comments Off on இயக்குநர்கள் சங்கத்துக்கு பாரிவேந்தரின் சூப்பர் அல்வா!!!

இயக்குநர்கள் சங்கம் பிளவுபடாமலிருக்க விக்ரமனும் ஆர்.கே.செல்வமணியும் எஸ்.ஆர்.எம்.குழும நிறுவனமும் சாதிக்கட்சித் தலைவருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து உடையாரை சங்கத்துக்கு அழைத்து அட்டகாசமான டுபாக்கூர் விழா நடத்தினர். இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவச மருத்துவம் செய்யப்படும் என்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள். எந்த நோய்க்கு? எப்படிப்பட்ட ஆபரேஷனா மருத்துவ பரிசோதனையா? எதுவும் விவரம் தெரிவிக்கப்படவில்லை. அனைவரும் பாரிவேந்தரை பாரிவள்ளல், கொடைவள்ளல் என்பதோடு நில்லாமல் எம்.ஜி.ஆர். அளவுக்கு (?) புகழ்ந்தனர். […]

Continue reading …

தொகுதியை மாற்றும் தலைகள் !!!

Comments Off on தொகுதியை மாற்றும் தலைகள் !!!

வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் இந்திய அரசியல்வாதிகளை பயமுறுத்துகிறது என்கிறார்கள். பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அத்வானி தங்கள் தொகுதிகளை மாற்ற நினைக்கிறார்களாம். அருண்ஜெட்லி பஞ்சாப்பை குறிவைத்தாராம். அங்கு கிரிக்கெட் வீரர் சித்து வலிமையாக உள்ளாராம். அடுத்தது மத்தியபிரதேசம் விதுஷா தொகுதியை குறி வைத்தார். அங்கு சுஷ்மா சுவராஜ் நிற்கிறாராம். பிறகு டெல்லியை குறிவைத்தார். தற்போது விஜயகோயல் நிற்க முடிவு செய்து உள்ளாராம். இதனால் குழப்பமடைந்த அருண்ஜெட்லி குஜராத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.

Continue reading …

மோடி ஆதரவு முஸ்லீம்கள்!

Comments Off on மோடி ஆதரவு முஸ்லீம்கள்!

முஸ்லிம்களின் ஆதரவை பெற அகில இந்திய கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. இதில் முக்கியமாக பன்சந்தா என்ற முஸ்லீம் பிரிவினர், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களில் அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்களாம். பன் சந்தா முஸ்லீம்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக குஜராத்தி, உத்திரபிரதேச மாநிலங்களில் பரவி உள்ளார்களாம். இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் நரேந்திரமோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் என்று குறிப்பிடுகிறார்களாம்.

Continue reading …

அரசியலை கலக்கும் வெங்காயம்&உப்பு !!!

Comments Off on அரசியலை கலக்கும் வெங்காயம்&உப்பு !!!

வெங்காயம். தந்தை பெரியாரின் அரசியல் உ„சரிப்பு. ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்தினால் வெங்காயம் என்பார்கள். ஆனால், இந்த வெங்காயம் இந்திய அரசியல் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலையில் தற்போது உள்ளது. காரணம் இன்றைய வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய ஆட்சியையே கவிழ்க்கும் நிலைக்கு செய்யலாம் என்கிறார்கள். பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்தபோது டெல்லி மாநில ஆட்சி வெங்காயத் தட்டுப்பாட்டால் தோல்வியுற்றது. வெங்காயத்தை வைத்து மிகப்பெரிய அரசியலை காங்கிரஸ் நடத்தியது. தற்போது அதே வெங்காயம் காங்கிரசுக்கு ரிவிட் அடிக்கப்போவதாக […]

Continue reading …

நடிகர் ஜெயக்கு முருகதாஸ் புகழாரம் !!!

Comments Off on நடிகர் ஜெயக்கு முருகதாஸ் புகழாரம் !!!

‘ ராஜா ராணி’  படத்தின் பிரத்தியேக சில காட்சிகளை பார்த்த பின்னர்  படத்தின் தயாரிப்பாளர்  முருகதாஸ் இப்படத்தின் இரு கதாநாயகர்களில் ஒருவரான ஜெய் பற்றி புகழ்ந்த வண்ணம் உள்ளார். என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும் ‘ படத்திலேயே  அவருடைய  நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான , திறமையான நடிகராவார் .என்னுடைய கணிப்பின் படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர் , நிச்சயம் பிரகாசிப்பார் , ராஜா ராணி படத்தில் அவர் […]

Continue reading …

காதலில் சிக்கிய நடிகைகளின் மார்க்கெட் ‘அம்பேல்’!

Comments Off on காதலில் சிக்கிய நடிகைகளின் மார்க்கெட் ‘அம்பேல்’!

காதலில் சிக்கிய நடிகைகள் உடனே கழுத்தில் தாலியை வாங்கிக்கொண்டு திருமணமாகி செட்டில் ஆகிவிடவேண்டும். இல்லாவிட்டால் காதலில் சிக்கிய நடிகைகள் எப்போது திருமண பந்தத்தில் சிக்கி படப்பிடிப்புக்கு கல்தா கொடுத்து விடுவார்களோ என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அச்சப்படுவது இயல்பு. காதல் வயப்பட்ட நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கும் நட்சத்திர நடிகர்கள் தயங்குவார்கள். இப்போது விஷால் காதல் வலையில் சிக்கிய ஓவியாவுக்கு படமில்லாததால் சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிவிட்டார். சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்ட சமந்தாவுக்கும் புதிய படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. சிம்புவைக் […]

Continue reading …

காதல் வலியை அனுபவிக்கும் தயாரிப்பாளர் தங்கர்பச்சான்!

Comments Off on காதல் வலியை அனுபவிக்கும் தயாரிப்பாளர் தங்கர்பச்சான்!

காதலில் விழுந்து மீண்டுவிட முடியாமல் சிக்குண்ட இதயம் போலத்தான் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வேதனையோடும் வலியோடும் வெளியில் சொல்லமுடியாமல் துடியாய்த் துடித்துக்கொண்டிருப்பதாய் தங்கர்பச்சான் வருத்தப்பட்டார். ஒரு கலைஞனிடமிருந்து நீண்ட வலிகளுக்குப் பின்தான் சிறந்த படைப்புகள் (படம்) உருவாக்கமுடியும் என்றால் அந்தப் படைப்புக்கள் இனி எனக்கு வேண்டாம். காதலர்களை களவாடிய பொழுதுகள் களவாடும் என்றும் உறுதியுடன் சொன்னார், தங்கர்பச்சான். பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோரின் நடிப்பில் வைரமுத்து பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். கருணாமூர்த்தி, […]

Continue reading …

மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இராமநாராயணன்!

Comments Off on மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இராமநாராயணன்!

வாலிப கலைஞர்களுக்கு அதிக சம்பளம் தரவேண்டும். கால்ஷீட்டும் உடனே கிடைக்காது. இதனால் யானை, கரடி, குரங்கு, நாய், காளை ஆகிய மிருகங்களை வைத்து படங்களை இயக்கி தயாரித்து வசூலை அள்ளியவர் இராம.நாராயணன். இப்போது மிருகங்களை வைத்து படமெடுப்பதில் சட்ட„சிக்கல் இருப்பதால் வயதான மூத்த கலைஞர்கள், டி.ராஜேந்தர், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், வெண்ணிற ஆடைமூர்த்தி, சித்ரா லட்சுமணன் ஆகியோரை வைத்து ‘ஆர்யா சூர்யா’ படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். இது அவருக்கு 126வது படம். சமீபத்தில் நடந்த […]

Continue reading …

சிம்பு, தனுஷ் பற்றி நடிகை ரிச்சா

Comments Off on சிம்பு, தனுஷ் பற்றி நடிகை ரிச்சா

ஒஸ்தி’ படத்தில் சிம்பு, மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பெயரெடுத்தவர் ரிச்சா கங்கோபாத்யா. இருவர் பற்றியும் ரிச்சா கூறும்போது, “தனுஷ், சிம்பு இருவரின் பெர்சனாலிட்டி வேறு, வேறு. ஆனால் நடிப்புத்திறமையும் இசையறிவும் இருவருக்குமே அதிகம். பல விஷயங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். இருவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்றார் ரிச்சா.

Continue reading …

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

Comments Off on அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரை உலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக வந்த செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்களில் [ தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2 ] அவர் நாயகியாக நடித்து தான் என கூறபடுகிறது . இந்த புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது ‘ இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது , என்னை பொறுத்த வரை […]

Continue reading …