Home » Entries posted by Shankar U (Page 272)
Entries posted by Shankar

பிரதமருக்கு விருதுகளை அள்ளி வழங்கும் நாடுகள்!

Comments Off on பிரதமருக்கு விருதுகளை அள்ளி வழங்கும் நாடுகள்!

பிரதமர் மோடி ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றார். அங்கிருந்து பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற அவருக்கு அங்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டிற்காக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்ற போது பல நாட்டு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், நேற்று முன் தினம் அங்கிருந்து பப்புவா நியூ கினியா தீவு நாட்டிற்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் பப்புவா நியூ கினியா செல்வது இதுவே முதல்முறை. அங்கு அவர் அந்த நாட்டு […]

Continue reading …

தள்ளிப் போகும் சிம்பு படம்!

Comments Off on தள்ளிப் போகும் சிம்பு படம்!

இயக்குனர் தேசிங் பெரியசாமி “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்துக்காக […]

Continue reading …

2000 ரூபாயால் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட கலவரம்!

Comments Off on 2000 ரூபாயால் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட கலவரம்!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பெட்ரோல் போட்ட பின் 2000 ரூபாய் கொடுத்ததால் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பங்க் ஊழியர் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் 2000 ரூபாய் நோட்டு பெறப்படும் என்றும் பேருந்து மற்றும் ரயில்களிலும் டிக்கெட் எடுக்க 2000 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேசம் […]

Continue reading …

மணமகனை 20கிமீ துரத்திப் பிடித்த மணமகள்!

Comments Off on மணமகனை 20கிமீ துரத்திப் பிடித்த மணமகள்!

திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணமகன் மண்டத்திற்கு வராமல் ஓட முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பதான் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவெடுத்தனர். இருவீட்டாரின் கலந்துபேசி ஞாயிற்றுக்கிழமையன்று பூதேஸ்வர நாத் கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். திருமண தினத்தன்று மணமகன் வெகு நேரமாகியும் மேடைக்கு வரவில்லை. மணப்பெண் திருமணத்திற்குக் காத்திருக்கும்போது, போனில் […]

Continue reading …

ஆவின் நிறுவனத்தின் விளக்கம்

Comments Off on ஆவின் நிறுவனத்தின் விளக்கம்

ஆவின் பால் நிறுவனம் தமிழகத்தில் அமுல் நிறுவனம் கால் பதிப்பது பற்றிய விளக்கமளித்துள்ளது. ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்கள் விற்பனையில் முன்னணியாக உள்ளது. இதுதவிர தனியார் துறையைச் சேர்ந்த பால் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் வெளிமாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆவின் கொடுப்பதைவிட லிட்டருக்கு ரூ.2 அதிகம் கொடுப்பதாகக் கூறி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள […]

Continue reading …

திமுகவினர் தூண்டுதலால் பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டு!

Comments Off on திமுகவினர் தூண்டுதலால் பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டு!

மகா சுசீந்திரன் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர் மாவட்ட பாஜக 18 நிர்வாகிகள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. பதவி கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு சிலர் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் தனக்கு விரும்பிய பதவி கிடைக்காததால் […]

Continue reading …

‘மோடி’ மாம்பழம் காஸ்ட்லியா?!

Comments Off on ‘மோடி’ மாம்பழம் காஸ்ட்லியா?!

உபேந்திரா சிங் என்பவர் கண்டுபிடித்த பிரதமர் பெயரிலான மாம்பழம் விரைவில் உத்தரபிரதேசத்திலிருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழங்கள், காய்கறிகளில் ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஆய்வு செய்து பல புதிய ரகங்களை வேளாண் ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த உபேந்திரா சிங் என்பவர் அப்பகுதியில் விளையும் புகழ்பெற்ற துஸ்ஸேரி மாம்பழத்துடன் உள்ளூர் மாங்கனிகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை தயாரித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிடப்பட்ட இந்த புதிய மாம்பழ […]

Continue reading …

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மோதல்!

Comments Off on இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மோதல்!

பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. காசா முனையை ஹமாஸ் என்ற அமைப்பு பாலஸ்தீனத்தின் ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் நாடு பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இதேபோன்று பல ஆயுதமேந்திய அமைப்புகள் காசா முனை மற்றும் மேற்குகரையில் இயங்கி வருகின்றன. பாலஸ்தீனத்திற்கு மேற்குகரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இப்பகுதியின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதமேந்திய […]

Continue reading …

மெட்ரோவில் இலவச டிக்கெட் கிடையாது!

Comments Off on மெட்ரோவில் இலவச டிக்கெட் கிடையாது!

சென்னை மெட்ரோ ஐபிஎல் சீசன் நடந்து வரும்போது சென்னையில் நடைபெறும் ப்ளே ஆப் போட்டிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மெட்ரோ ரயில் சேவை இனி கிடையாது என அறிவித்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. ஐபிஎல் சீசனை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை காண சென்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் நடந்த அனைத்து லீக் போட்டிகளுக்கும் […]

Continue reading …

நடிகர் சரத்பாபு காலமானார்!

Comments Off on நடிகர் சரத்பாபு காலமானார்!

நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இன்று அவர் உண்மையிலேயே காலமானார் என்ற தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே நடிகர் சரத்பாபு உடல்நல கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலம் தேறிக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திடீரென அவர் காலமானதாக சில நாட்களுக்கு முன் வதந்தி கிளம்பியது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் இது குறித்து விளக்கமளித்தனர். தற்போது […]

Continue reading …