
இன்று 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின, இவர்களுக்கான மறுகூட்டல் மற்றும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 24 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக […]
Continue reading …
வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31ம் தேதி வெளியான “விடுதலை” திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் “விடுதலை”யும் இணைந்துள்ளது. சமீபத்தில் அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் தொடங்கியுள்ளது. 25 நாட்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் […]
Continue reading …
கடந்த 2007ம் ஆண்டு தமிழ் சினிமாவின் மாபெரும் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான “பருத்திவீரன்” வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். படத்தில் பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் “பொணம் திண்ணி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் கரகரப்பான குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் “செவ்வாழை ராஜூ”. அப்படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார். அதற்கு முன்னர் […]
Continue reading …
நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஜோடியாக இணைந்து நடித்தனர். இந்த இருவரின் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இருவரும் காதலித்து வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவும் இல்லை. இதையடுத்து கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தங்களது முதலாவது திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு “உன்னை நேசிக்கும் உணர்வு ஒருபோதும் […]
Continue reading …
நடிகை ராஷ்மிகாவின் சினிமா வாழ்க்கை கன்னட சினிமாவில்தான் ஆரம்பம் ஆனது. பன்மொழிப் படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ரசிகர்கள் செல்லமாக அவரை “நேஷனல் க்ரஷ்” என்று அழைகின்றனர். இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்தனர். இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின. திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, உட்பட நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அண்மையில் ஒரு புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் […]
Continue reading …
இன்று ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம். இயற்கையோடும், […]
Continue reading …
பாஜக தமிழகத்தில் வரும் 20ம் தேதி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் வேட்டை தமிழகம் முழுதும் காவல்துறை நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வரும் 22ம் தேதி பேரணி நடத்தி […]
Continue reading …
அமேசான் காட்டிற்குள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் காட்டிற்குள் ஏற்பட்ட இந்த விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 17 நாட்களுக்குப் பின் இன்று ஒரு 4 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது அமேசான் காடு. உலகில் நுரையீரல் என்று அழைக்கப்படும் இது மழைக்காடு. இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி, […]
Continue reading …
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிபர், பிரதமரை விட அதிகம் சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாட்டு பொதுகணக்கு குழு அந்நாட்டின் பிரதமர், அதிபர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பெறும் சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தி நியூஸ் இண்டர் நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அக்குழுவின் தலைவர் நூர் கான், பாகிஸ்தான் அதிபர் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பின்படி ரூ.896650 சம்பளம் பெறுகிறார் என்று கூறியுள்ளார். அந்த நாட்டின் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் ரூ.201574 […]
Continue reading …