
மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக திரைப்டத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் வரும் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11ம்தேதி வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், இதே தேதியில் […]
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் தீட்சதர் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் ரவி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஏன் கூறுகிறார். ஆளுநர் என்ன ஆண்டவரா? என்று கேள்வி எழுப்பினார். தீட்சதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா? ஆளுநர் குறிப்பிடுவது போல சிறுமியர்களுக்கு இரட்டை விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த […]
Continue reading …
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் மே 7ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று அது வலுப்பெற்று புயலாக மாறும் என்று தெரிவித்திருந்தது. நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதை அடுத்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை அதாவது […]
Continue reading …
நீட் தேர்வு நாளை நடக்கவிருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான இதற்கு இதோ சில ஆலோசனைகள்… இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என்ற 3 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகள் நீட் தேர்வில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் இருக்கும். அதில் ஒரு பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720 என்ற நிலையில் மாணவர்கள் […]
Continue reading …
வரும் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் கலவரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த அமித்ஷா உடனடியாக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டில்லி சென்றுள்ளார். அவர் மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் […]
Continue reading …
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் வேர்ல்ட் டூர் டாகுமெண்ட்ரியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அஜீத்தின் பைக் டிரிப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ள அஜீத் அங்குள்ள மக்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அஜீத் மிகவும் வயதான தோற்றத்தில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கிண்டலடித்ததோடு மட்டுமல்லாமல் […]
Continue reading …
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகசைதன்யா “கஸ்டடி” திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நாயகியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் […]
Continue reading …
ஆளுனரே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்லிவிட்டார், அதனால் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி நேற்று அளித்த பேட்டி ஒன்றில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து இருந்தார். இக்குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை […]
Continue reading …
திருமணம் நடைபெறப் போகும் பெண் ஒருவர் கட்டிட மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலம் சப்ரா மாவட்டம் முராக்பூர் கிராமத்தைச் சேர்ந்த நிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமேடையில், சக்ரா நகரின் பிண்டோலியின் வசிக்கும் ஜக்மோகன் மஹதொஅவின் மகன் ராஜேஸ்குமார் மணமகனாக நின்று கொண்டிருந்தார். மணமகன், மணமகள் இருவரும் மணமேடைக்கு வந்து மாலை அணிவித்துக் கொண்டனர். அங்கு உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கூடியிருந்தனர். அப்போது, […]
Continue reading …
கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். ஹரிபத்மன் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஹரிபத்மனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 16ம் தேதி […]
Continue reading …