Home » Entries posted by Shankar U (Page 284)
Entries posted by Shankar

நீட் தேர்வு சோதனை வன்முறை!

Comments Off on நீட் தேர்வு சோதனை வன்முறை!

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மாணவியின் உள்ளாடையை அகற்றியது மிகப்பெரிய வன்முறை என்று கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கலாச்சாரமும், பண்பாடும் போற்றி பாதுகாக்கப்படும் தமிழ்நாட்டில் இத்தகைய இழிவான செயல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது மாணவியின் உள்ளாடையிலிருந்து ஒலி வந்ததால் உள்ளாடையை […]

Continue reading …

தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

Comments Off on தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் முன்பே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 47000 மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் தனது வீட்டில் […]

Continue reading …

12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு?

Comments Off on 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு?

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து 5.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அவர்களுக்கான துணைத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் […]

Continue reading …

இந்திய அரசு போட்ட கண்டிஷன்!

Comments Off on இந்திய அரசு போட்ட கண்டிஷன்!

தற்போது வெளியாகி விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் எஃப்.எம் வசதி இல்லாமல் இருக்கிறது. இந்திய அரசு வெளியிட்டுள்ள ஆணை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது பல மாடல் ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. கேமரா, இண்டெர்னெட், ஃபிங்கர் சென்சார், ஜிபிஎஸ் என பல அம்சங்களோடு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்களில் எஃப்.எம் ரேடியோ வசதியில்லாமல் வெளியாகி வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் ரேடியோ கேட்பவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதாலும், அப்படி கேட்பவர்களும் இணைய வசதி மூலமாக […]

Continue reading …

வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

Comments Off on வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று வரலாற்றுச் சானையை படைத்துள்ளார் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி நந்தினி. இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பாதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் கூலி […]

Continue reading …

தமிழக அமைச்சரவை மாற்றமா? பிடிஆர் தூக்கப்படுவரா?

Comments Off on தமிழக அமைச்சரவை மாற்றமா? பிடிஆர் தூக்கப்படுவரா?

நாளை மறுநாள் தமிழக அமைச்சவை மாற்றம் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தூக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. நாளை மறுநாள் தமிழக அரசு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் அல்லது அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை […]

Continue reading …

ஆளுனரின் புகாரால் இறையன்புவுக்கு நோட்டீஸ்!

Comments Off on ஆளுனரின் புகாரால் இறையன்புவுக்கு நோட்டீஸ்!

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தமிழக ஆளுநர் ரவியின் புகார் காரணமாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். R சமீபத்தில் ஆளுநர் ரவி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறியது குறித்து கூறிய அவர் ’அது பொய் வழக்கு’ என்று தெரிவித்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக பொய் வழக்கு போடப்பட்டது என்றும் இந்த வழக்கில் 6, 7ம் வகுப்பு […]

Continue reading …

கள்ளழகரை பார்க்க வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு?

Comments Off on கள்ளழகரை பார்க்க வந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு?

இளைஞர் ஒருவர் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு மதுரையில் சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இந்த வைபவத்தை காண மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்திருந்தனர். அவ்வாறாக அழகர் வைபவத்தை காண வந்த எம்.கே.புரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் சூர்யா ராமராயர் மண்டகபட்டி அருகே தலையில் […]

Continue reading …

உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதி!

இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டியின் மகன் தன்பேஸ்புக் தளத்தில், இதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Continue reading …

அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் எப்போது?

Comments Off on அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் எப்போது?

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு படிப்புகளுக்கு மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க மே 19ம் தேதி கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க […]

Continue reading …