
நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் “விடுதலை” படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று […]
Continue reading …
கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த […]
Continue reading …
திடீரென நடிகர் விக்ரமுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு அவர் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் “பொன்னியின் செல்வன் 2” படத்தின் புரோமோசனை முடித்துவிட்ட நேற்று முதல் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. நேற்றைய படப்பிடிப்புக்கு முன்னர் அவர் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே […]
Continue reading …
மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம். இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. கேரளாவிலுள்ள அப்பாவி பெண்களை முஸ்லிமாக மாற்றி ஆப்கானிஸ்தான் அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரளாவை அடுத்து தமிழகத்திலும் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உளவுத்துறை […]
Continue reading …
இயக்குனரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா இன்று திடீரென காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி கடந்த 1980களில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த “ஊர்க்காவலன்” உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார். “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்குபெற்றார். கடந்த சில நாட்களாக உடல் […]
Continue reading …
கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்ஐஆர் திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். ஆனால் இந்த படத்தில் நஷ்டம் இல்லாமல் தப்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக […]
Continue reading …
அமேசான் நிறுவனம் எம்எக்ஸ் பிளேயர் என்ற ஓடிடி தளத்தை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓடிடி தளத்திற்கு மிகப்பெரிய ஆதரவு பொதுமக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. நேரடியாக திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் வாய்ப்பு தற்போது குறைந்துவிட்டாலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி விடுவதால் மாஸ் நடிகர்களின் படங்களை கூட ஒரு மாதம் பொறுத்திருந்து ஓடிடியில் பார்க்கும் நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் எம்எக்ஸ் பிளேயர் […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பாரிஸ் கார்னரில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது சென்னை பெரம்பூர் சாலையில் பழைய கட்டிடம் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிஷ்டவசமாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை என்பதால் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த கட்டிடத்தை எடுக்க மூன்று மாதத்திற்கு முன்பு அனுமதி பெறப்பட்டதாகவும் […]
Continue reading …
மதுபானங்களை ஏற்றி சென்ற லாரி கிருஷ்ணகிரி அருகே விபத்துக்குள்ளானது. இதையடுத்து அதில் இருந்த பீர் பாட்டில்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டி கொண்டு எடுத்துச் சென்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது பானங்கள் ஏற்றி சென்ற லாரி கிருஷ்ணகிரி அருகே திடீரென சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து காரணமாக பல பீர் பாட்டில்கள் உடைந்திருந்தாலும் உடையாத பாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து […]
Continue reading …
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எம்பி மேனகா காந்தி திடீரென சேற்றில் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற பகுதிக்கு பாஜக எம்பி மேனகா காந்தி பிரச்சாரம் செய்வதற்கு சென்றார். காரில் இருந்து இறங்கி அவர் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது அப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேறும் சகதியாக இருந்தது. ஒரு […]
Continue reading …