Home » Entries posted by Shankar U (Page 290)
Entries posted by Shankar

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் அறிவிப்பு!

Comments Off on ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் அறிவிப்பு!

துருக்கி அதிபர் ஏரோடகன் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைன் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார். இன்று துருக்கியில் செய்தியாளர்களை சந்தித்து அதிபர் ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைனை கண்காணித்து வந்ததாகவும் நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது பாரபட்ச முறையில் தொடர்ந்து தாக்குதல் தொடரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். துருக்கியில் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continue reading …

ரோபோக்கள் மூலம் கருத்தரிப்பா?

Comments Off on ரோபோக்கள் மூலம் கருத்தரிப்பா?

ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள் ரோபோக்கள் மூலம் பெண்களுக்கு விந்தணுவை செலுத்தி குழந்தை பெற வைக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரோபோக்கள் மூலம் விந்தணுவை பெண்களின் உடலுக்குள் செலுத்தி கருத்தரிக்க வைக்கும் முயற்சிகள் ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்டன. விந்தணுவை ரோபோக்கள் ஊசி மூலம் செலுத்தி பெண்கள் கருவுறுவது வெற்றி அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறையின் மூலம் இரண்டு பெண்கள் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகவும் எவ்வித சிக்கலும் இன்றி குழந்தை பிறந்தது என்றும் ரோபோக்களை பயன்படுத்தி விந்தணுவை […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

Comments Off on ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியில் இருந்து நியதிக்கு புறம்பாக நீக்கியும் கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் தான் என்ற விதியை மாற்றி அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் வரமுடியும் என்ற அடிப்படை விதியை மாற்றியதற்காகவும் எடப்பாடி […]

Continue reading …

“கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களா?

Comments Off on “கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களா?

சிறுத்தை சிவா சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட […]

Continue reading …

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

Comments Off on சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!

சமூக வலைதளங்களை பயன்படுத்த அமெரிக்காவில் உள்ள சிறுவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இதனால், உலகில் உள்ள அனைவரும் இணையதளத்தையும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினாலும், இதனால் இளைர்கள் மற்றும் மாணவர்களின் மனம், உடல், மற்றும், படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக், போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிவுகள் வெளியிடுவோரின் மன நலம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில், […]

Continue reading …

சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

Comments Off on சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை […]

Continue reading …

பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Comments Off on பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

துபாய்க்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனியார் நிதி நிறுவனமான ஆரூத்ரா கோல்டு நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, இந்த […]

Continue reading …

உடல் எடை குறைத்த மாளவிகா மோகனன்!

Comments Off on உடல் எடை குறைத்த மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் “மாஸ்டர்”, “பேட்ட”, “மாறன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த “மாறன்” திரைப்படம் தோல்வியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன. சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். இதுபற்றி […]

Continue reading …

சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை!

Comments Off on சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை!

செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தாக்கு ஏற்கனவே தசை அழற்சி நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், அவர் மீண்டும் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஷகுந்தலா” உள்ளிட்ட படம் கலவையான விமர்சனம் பெற்றது. இதுபற்றி தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சித்தார். இதற்கு […]

Continue reading …

பாலகிருஷ்ணா குறித்து சூப்பர் ஸ்டாரின் கருத்து!

Comments Off on பாலகிருஷ்ணா குறித்து சூப்பர் ஸ்டாரின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில், “பாலய்யா ஜீப்பையே பறக்கவிடலாம், நான் செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். “வீரசிம்மா ரெட்டி” பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு திரைப்படம் ரிலீசானது. அமெரிக்காவிலும் இப்படம் ரிலீசான நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்தனர். ஆனால் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சினிமா ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த படம் மட்டுமில்லை, பாலகிருஷ்ணாவின் அனைத்து படங்களிலும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் கூட […]

Continue reading …