Home » Entries posted by Shankar U (Page 291)
Entries posted by Shankar

கோவையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம்!

Comments Off on கோவையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம்!

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள் வீடு திரும்பினர். 8 மாணவ, மாணவிகள் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Continue reading …

கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

Comments Off on கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார். வரும் 10ம் தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று அவர் கர்நாடகம் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கூறிய போது ஊழல் கரைப்படிந்த […]

Continue reading …

அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

Comments Off on அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பிலிருந்தும் உதயநிதி மற்றும் டி.ஆர்.பாலு தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு பதிலளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது […]

Continue reading …

மதுரை-கோவை ரயில்வே சேவையில் மாற்றம்!

Comments Off on மதுரை-கோவை ரயில்வே சேவையில் மாற்றம்!

தெற்கு ரயில்வே மதுரை கோவை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ரயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரயில் நிலைய பாலத்தில் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. எனவே ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதியம் 12.15 மணிக்கு கோவை சென்றடையும் மதுரை – கோவை ரயில் இந்த இரண்டு நாட்களும் மதுரையிலிருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் […]

Continue reading …

அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

Comments Off on அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

அமெரிக்கர்கள் சூடான் நாட்டிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சூடான் நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூடானில் தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இரு தரப்பினரும் போரை நிறுத்த […]

Continue reading …

13 நபர்களை கொலை செய்த கர்ப்பிணி பெண்!

Comments Off on 13 நபர்களை கொலை செய்த கர்ப்பிணி பெண்!

கர்ப்பமாக இருந்த கர்ப்பிணி ஒருவர் 13 நபர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் சராரத். இவர் கடந்த சில மாதங்களாக படிப்படியாக தனது உயிர் தோழி, காதலர் உள்ளிட்ட 13 பேர்களை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாகவும் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இந்த கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் கொலை செய்த நபர் ஒருவரின் நண்பர் இவரின் […]

Continue reading …

65 வயது மேயர் 16 வயது சிறுமியுடன் திருமணம்!

Comments Off on 65 வயது மேயர் 16 வயது சிறுமியுடன் திருமணம்!

65 வயதான ஹிசாம் ஹூசைன் தெஹைனி என்பவர் பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயராக இருக்கிறார். இவர் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் பாரானா மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி(65). இவர் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், இவருக்கு மொத்தம் 16 குழந்தைகள் உள்ளனர். மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி பள்ளி மாணவியான 16 வயது ரோட் காமர்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Continue reading …

கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டாயம்!

Comments Off on கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டாயம்!

இனி கட்டாயம் கணினி சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உள்ளிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அது குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கணினி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சான்றிதழ் படிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் அரசு நடத்துகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி, நீதிமன்றம் […]

Continue reading …

இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

Comments Off on இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை […]

Continue reading …

அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

Comments Off on அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

இந்திய ரிசர்வ் வங்கி அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் அதில் தமிழகம் முதல் இடத்திலும் தமிழகத்தை அடுத்து ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. […]

Continue reading …