
இளைஞரை காதலித்து வந்த இளம்பெண் இளைஞரின் தந்தையுடன் ஓடிப்போன சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த கமலேஷ்குமாரின் மகன் அமித்(20). இவர்கள் இருவரும் கான்பூரில் உள்ள கட்டிட தொழிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஒரு இளம்பெண்ணுடன் அமித்திற்குப் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது. இளம்பெண் அடிக்கடி அமித்தின் வீட்டிற்குச் சென்றபோது, அமித்தின் தந்தை கமலேஷ்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இளம்பெண்ணும், கமலேஷையும் காணவில்லை. இதையடுத்து அப்பெண்ணின் சகோதரி காவல் […]
Continue reading …
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சில தொகுதிகளில் ஓபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெற்றனர். கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் […]
Continue reading …
காதலிக்கு திருமணம் ஆனபிறகும் தொல்லை கொடுத்ததால் தெலுங்கானா மாநிலத்தில் லாரி ஓட்டுனர் பட்டப்பகலில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சிரியாவாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தில் வசித்து வரும் கனகய்யாவின் மனைவி பத்மா. இத்தம்பதியர்க்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகளும் அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ் என்றவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்தபோது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்தாண்டு அப்பெணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. […]
Continue reading …
பிரேசில் நாட்டின் நீதிமன்றம் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டெலிகிராம் தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராம் செயலியை நாடு முழுவதும் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டெலிகிராம் செயலிக்கு தினமும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நவ நாஜிக்கல் குழு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]
Continue reading …
வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் வேண்டும் என அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் […]
Continue reading …
தமிழ்நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அறிமுகம் ஆனதிலிருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக “சலார்” படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் “சலார்” படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக […]
Continue reading …
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4500 என்று அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பில், ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கு உணவுப்படியாக ரூபாய் 300 வழங்கப்படும். காவலர்களுக்கு எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 370லிருந்து 515ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை புறநகரில் புதிதாக மூன்று பெருநகர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். காவல்துறையல் சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் உருவாக்கப்படும். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கு மகளிர் விடுதி கட்டி தரப்படும். பெண் குழந்தைகள் […]
Continue reading …
கோவையில் கடைக்காரர் ஒருவர் சிக்கன் மற்றும் மட்டன் வாங்க பணம் இல்லையா? தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என்று விளம்பரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவர் வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்குவது போல் சிக்கன், மட்டன்களையும் தவணை முறையில் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். வீட்டு விசேஷங்களுக்கு 5000 ரூபாய்க்கு மேல் இறைச்சி வாங்கும் பொது மக்களுக்கு […]
Continue reading …
இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா.சேகர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளளார். இன்ற காலை அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மா.சேகர் சற்றுமுன் எடப்பாடி […]
Continue reading …
வித்தியாசமான கதைக்களங்களில் நடித்துதான் படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்று வளர்ந்து வரும் நடிகர்கள் முயன்று வருகின்றனர். சமீபத்தில் இப்படி வெளியான “டாடா” திரைப்படம் ஹிட்டானது. இப்படி ஒரு படமாக உருவாகி வருகிறது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “லப்பர் பந்து” திரைப்படம். படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த […]
Continue reading …