
இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். இவர் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவருக்கு விருதுகள் குவிந்தது. அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் “கிரிக் பார்ட்டி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் “கீதா கோவிந்தம்“ ஹிட்டால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். அவ்வப்போது ரகசியமாக காதலன் விஜயதேவரகொண்டாவுடன் […]
Continue reading …
மத்திய அரசு தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் அதிக மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு, “நாடு முழுதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிகளவில் உள்ளது. 23 மாநிலங்களில் 131 நகரங்களில் மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது என ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நேற்று கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த […]
Continue reading …
மும்பையில் இன்று இந்தியாவின் முதல் இ-டபுள் டக்கர் பேருந்து இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த டபுள் டக்கர் பேருந்தில் 90 பேர் வரை உட்கார்ந்து பயணம் செய்ய முடியும். மும்பை மாநகர போக்குவரத்து கழகம் 200 ‘இ-டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல் கட்டமாக சில பேருந்துகள் மட்டும் மும்பையில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து […]
Continue reading …
உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புனே நகரில் கூகுளின் கிளை அலுவலகம் உள்ளது. இங்குள்ள முந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 11வது மாடியிலிருந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில், நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துணை ஆணையர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு, சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் […]
Continue reading …
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் நடிகர் கவினை பாராட்டியுள்ளார். கவின் நடிப்பில் “லிப்ட்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில், “டாடா” படம் வெளியானது. படத்தில் இவருக்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்த அபர்ணாதாஸ் நடித்துள்ளார். இப்படத்தை கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. தமிழகம் முழுதும் இப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “லியோ” […]
Continue reading …
இன்று சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் காட்டிய நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மோசமான சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது. அதானி குழுமங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு […]
Continue reading …
தேமுதிக தலைவரான விஜயகாந்த் பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும்- என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வறுமையால் இரண்டு உயிர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது. தனி ஒருவனுக்கு உணவு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையில் […]
Continue reading …
தேமுதிக பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவின் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெரினா நடுக்கடலில் பேனா சிலை வைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது […]
Continue reading …