Home » Entries posted by Shankar U (Page 354)
Entries posted by Shankar

ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

Comments Off on ஏடிஎம்மில் ஏற்பட்ட குளறுபடியால் பரபரப்பு!

சென்னையில் உள்ள ஏடிஎம்மில் ரூ.200 பதிவிட்டால் ரூ.500 வந்ததால் குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள அம்பத்தூரில் ஒரு ஏடிஎம்மில் இளைஞர் வருவார் 200 பணம் எடுக்க சென்றபோது அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலர் 200 ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோது அனைவருக்கும் 500 ரூபாய் வந்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் […]

Continue reading …

பாஜக பிரபலம் நீதிபதியாக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

Comments Off on பாஜக பிரபலம் நீதிபதியாக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மூத்த வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக பிரபலம் நியமனம் ஆவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரி என்பவரை சென்னை ஹை கோர்ட் நீதிபதியாக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ள நிலையில் அந்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று விட்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக […]

Continue reading …

சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

Comments Off on சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தற்போதிருக்கும் சிவில் சட்டத்தை மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்ற ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியபோது பொது “சிவில் சட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பே அதன் பதவி காலம் முடிந்து விட்டது. பொது […]

Continue reading …

ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

Comments Off on ஓபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

ஓபிஎஸ் தன்னிடம் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் அவருக்காக கையெழுத்து போடுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்திடுவேன் என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும் […]

Continue reading …

பிப்ரவரி 1 முதல் கனமழை!

Comments Off on பிப்ரவரி 1 முதல் கனமழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வுதான் இதற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமாரி திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Continue reading …

திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

Comments Off on திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது!

வட இந்திய இளைஞர்கள் திருப்பூரில் தமிழக இளைஞர்களை தாக்கியதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்புர் அனுப்பபாளையம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர்களை பீகாரரைச் சேர்ந்த சில இளைஞர்கள் தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. தற்போது பீகாரை சேர்ந்த ராஜத்குமார், பரேஷ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]

Continue reading …

கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

Comments Off on கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்துள்ளது. ஜேசிபி எந்திரம் மூலமாக நேற்று கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து இடிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது வெளிப்புற சுவர் இடிந்து நடைபாதையில் சென்று கொண்டிந்த மூன்று பேர் மேல் விழுந்தது. அதில் ஒருவர் […]

Continue reading …

எல்ஐசியின் ரூ.300 கோடி முதலீடு அதானி குழுமத்திலா?

Comments Off on எல்ஐசியின் ரூ.300 கோடி முதலீடு அதானி குழுமத்திலா?

எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதானி குழுமத்தின் பங்குகளை மேலும் ரூபாய் 300 கோடிக்கு அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஹிண்டர்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெருமளவில் சரிந்தது. அவ்வகையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்திற்கு 27 ஆயிரத்து 300 கோடிகள் நஷ்டம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் பங்குகளின் […]

Continue reading …

பிரதமரின் கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!

Comments Off on பிரதமரின் கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!

ஓபிஎஸ் மகனான ஒபி ரவீந்திரநாத் எம்பிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக மக்களவை எம்பி என்று குறிப்பிட்டு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அதிமுக எம்பி ஆக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என […]

Continue reading …

மாரி செல்வராஜ் தகவல்!

Comments Off on மாரி செல்வராஜ் தகவல்!

இயக்குனர் மாரி செல்வராஜ் யோகி பாபுவை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் “பொம்மைநாயகி” திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் “பொம்மைநாயகி” படமும் உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மாரி […]

Continue reading …