Home » Entries posted by Shankar U (Page 382)
Entries posted by Shankar

மலையாள திரையுலகில் ஐடி ரெய்டு!

Comments Off on மலையாள திரையுலகில் ஐடி ரெய்டு!

வருமான வரித்துறை அதிகாரிகள் சில முக்கிய மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். மலையாள நடிகரும்,- தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரன் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்களின் “வெளிப்படையாத வெளிநாட்டு முதலீடுகளை” கண்டறிய கேரளா, தமிழ்நாடு மற்றும் மும்பையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் காலை 8 மணிக்குத் தொடங்கிய இத்தேடுதல்கள் நள்ளிரவு வரை நடந்ததுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், ஆண்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் […]

Continue reading …

அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு!

Comments Off on அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டன என்பதும் ஏராளமான மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அரையாண்டுதேர்வு டிசம்பர் 23ம் தேதி முடிவடையும் நிலையில் 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையில் கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறையும் அடங்கும். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் […]

Continue reading …

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

Comments Off on சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

சென்னை மாநகராட்சி தமிழகத்தில் தற்போது கான்க்ரீட் மற்றும் தார் சாலைகள் போடப்படுவதற்கு மாற்றாக புதிய சாலையை போட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் கான்கிரீட் சாலைகளுக்கு பதிலாக பேவர் பிளாக் என்ற சாலை போட சென்னை மாநகராட்சியில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் கட்டமாக மணலி, ராயபுரம் வளசரவாக்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2.75 கிலோ மீட்டர் […]

Continue reading …

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் பரபரப்பு!

Comments Off on கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் பரபரப்பு!

இரண்டு மணி நேரம் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்ல வேண்டிய பேருந்து ஒன்று பயணிகள் நிரம்பிய பின்னரும் எடுக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பயணிகள் மற்றும் ஓட்டுநருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் அனைவரும் திடீரென பேருந்தை ஓட்டாமல் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது ஒரு பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு எடுக்கவில்லை என்று கூறியதையடுத்து ஓட்டுநர் கோபப்பட்டதாகக் கூறினார். […]

Continue reading …

போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

Comments Off on போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

போக்குவரத்துத்துறை மூத்த குடிமகன்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்குவது குறித்து அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்களை பெறலாம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சென்னையில், 4 பணிமனை பேருந்து நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 […]

Continue reading …

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நம்பிக்கை!

Comments Off on அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நம்பிக்கை!

மா.சுப்பிரமணியன் 2023ம் ஆண்டு நீட் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். நீட் தேர்வு […]

Continue reading …

டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!

Comments Off on டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!

தலைநகர் டில்லியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை முதல் தளத்தில் உள்ள வகுப்பிலிருந்து ஆசிரியை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தார். இச்சம்பவத்தில் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியையை […]

Continue reading …

நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை!

Comments Off on நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை!

4 கால்களுடன் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பிறந்துள்ளது. நாள்தோறும் இந்த உலகில் அதிசயம் மற்றும் ஆச்சர்யங்கள் கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி குஷ்வாஹா என்ற கர்ப்பிணி ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பிரசவித்தார். இந்த குழந்தைக்கு 4 கால்கள் இருந்ததால், அதைப் பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். 2.3 கிலோ எடையுடன் பிறந்து இக்குழந்தை நல்ல […]

Continue reading …

அஜீத் பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

Comments Off on அஜீத் பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

நடிகர் அஜீத்குமாரின் உலகச் சுற்றுப் பயணம் குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜீத்குமார், ஹெச். வினோத்குமார் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, இடையிடையே தன் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் பகுதியாக இந்தியா முழுவதும் அஜீத்குமார் பைக்கில் பயணம் மேற்கொண்டார். அவரது பயணம் பைக் ரைடர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் […]

Continue reading …

மத்திய அரசின் அறிவிப்புக்கு காரணம் எங்கள் போராட்டமே!

Comments Off on மத்திய அரசின் அறிவிப்புக்கு காரணம் எங்கள் போராட்டமே!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்னூரில் விவசாய நிலங்களை பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்த மத்திய அரசின் அறிவிப்புக்கு எங்களது போராட்டமே காரணம் என தெரிவித்துள்ளார். அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது அறிவாலயம் அரசு. விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் […]

Continue reading …