
மூதாட்டி ஒருவரை அரசுப் பேருந்து நடத்துனர் கவுரவக் குறைவாக நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் இருந்து 34/கி என்ற அரசுப் பேருந்து இயங்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தில் இன்று பயணித்த மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அதே பேருந்தில் மீண்டும் திரும்பியுள்ளார். அப்போது, நடத்துனர் மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக […]
Continue reading …
சென்னை ஐகோர்ட் தாயம் விளையாட்டில் தோற்றதால் ஆத்திரத்தில் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த தனசேகர் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு நண்பர்களுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை ஆனந்தன் என்பவர் தோற்கடித்தார். இதனால் மது போதையில் இருந்த தனசேகர் ஆத்திரத்தில் ஆனந்தனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு […]
Continue reading …
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவிலிருந்து இரண்டு யானைகள் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மதுரையில் நடந்த கஜபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யானைகள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அமைச்சர் மகன் திருமணம் நடைபெறும் இடத்தில் யானைகள் நிறுத்தப்பட்டன என தெரிகிறது. செப்டம்பர் 30 அன்று நடந்த நிகழ்விற்கு விருந்தினர்களை வரவேற்க விலங்குகள் பயன்படுத்தப்பட்டன என்று ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் ஆர்டிஐ தாக்கல் செய்யப்பட்டதை […]
Continue reading …
சமீபத்தில் தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தித் தொழில்பூங்கா அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று தமிழக அரசு, இந்த அரசாணையை ரத்து செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் […]
Continue reading …
திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஜனவரி 12 முதல் 18ம் தேதி வரை சிறப்புக்காட்சி திரையிடுவதற்கு அனுமதி கேட்டு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளனர். அஜீத் நடித்துள்ள “துணிவு,” விஜய் நடித்த “வாரிசு” ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை […]
Continue reading …
கடந்த மாதம் மகிழ் திருமேணி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கலகத் தலைவன்” திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, மக்களின் நிலை குறித்து பேசியுள்ளதாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும், இந்த படத்துக்கு மோசமான விமர்சனங்கள் ஒன்றும் எழவில்லை. ஆனால் படத்துக்கு வசூலும் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாம். பல திரையரங்குகளில் படம் ரசிகர்கள் கூட்டமின்றி ஓடி வருகிறது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் இப்போது […]
Continue reading …
ஜப்பான் அரசு குழந்தை பெற்றுக் கொண்டால் 3 லட்சம் ரூபாய் மானியம் என அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே வேளையில் ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதாகவும் அதேபோல் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அதனால் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என […]
Continue reading …
முதல் முறையாக தமிழகத்தில் நடமாடும் இடுகாடு வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. 25 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ள நடமாடும் இடுகாடு இயந்திரத்தை வீடுகளுக்கு சென்று பிணங்களை எரித்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியை சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேவைக்காக 7,500 ரூபாய் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக ஈரோட்டில் இந்த வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ரோட்டரி […]
Continue reading …
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பீச் ஒலிம்பிக் போட்டி நடைபெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இன்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடிய பின் செய்தியாளர்கள் சந்திப்பில், “முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறார், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு […]
Continue reading …
பள்ளி மாணவிகள் சேர்ந்து தலைமை ஆசிரியரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இது ஒரு தகவல் தெரிந்தவுடன் சக மாணவிகள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை கயிற்றால் கட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் […]
Continue reading …