Home » Entries posted by Shankar U (Page 396)
Entries posted by Shankar

கொடநாடு கொலை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

Comments Off on கொடநாடு கொலை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போனதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க […]

Continue reading …

“தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

Comments Off on “தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

டிசம்பர் 9ம் தேதி நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த “தாதா” திரைப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும் நான்கே நான்கு காட்சிகளில் மட்டும்தான் நடித்துள்ளேன் என்றும் யோகிபாபு கூறியுள்ளார். இன்று யோகி பாபு நடிப்பில் உருவான “தாதா” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியாகும் என்றும், இப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கின்னஸ் கிஷோர் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் யோகிபாபு […]

Continue reading …

மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் டும் டும் டும்!

Comments Off on மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் டும் டும் டும்!

இன்று சென்னையில் நடிகர்கள் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இளம் நடிகர் கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அதன் பின், “இவன் தந்திரன்,” “தேவராட்டம்,” “இருட்டு அறையில் முரட்டுக் குத்து,” “ஆனந்தம் விளையாடும் வீடு” உட்பட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர். இன்று […]

Continue reading …

சிறைத்துறை டிஜிபி புதிய தகவல்!

Comments Off on சிறைத்துறை டிஜிபி புதிய தகவல்!

சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தமிழ்நாட்டு சிறையிலுள்ள கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திப்பதில் நவீன முறை பயன்படுத்தப்படும் என என்பவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்கும் போது பொருட்களை கொடுப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய சிறைகளில் கைதிகள் குடும்பத்தினரை சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடித் தடுப்பு அமைக்கப்படும். கைதிகள் மற்றும் உறவினர்கள் போன்கள் மூலம் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் கைதிகளுக்கு […]

Continue reading …

வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

Comments Off on வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

மின்வாரியம் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பும் வாடகைதாரரின் பெயருக்கு மாறிவிடுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை மின் இணைப்பில் இணைத்தால் அவரது பெயருக்கு மின்இணைப்பு மாறாது. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய முடியும். வீட்டின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே வாடகைவீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பில் தங்களது ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும். வாடகைதாரர் மாறும் போது புதிதாக குடியிருக்க வருவோரின் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

அமைச்சர் செந்தில்பாலாஜி 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “கைத்தறி, விசைத்தறி, 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்திலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படும். அவை நிறுத்தப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மின் வாரிய அலுவலகங்களில் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளும் இணைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஐந்து இணைப்புகள் வைத்திருந்தாலும் […]

Continue reading …

இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

Comments Off on இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

“அமர்க்களம்” திரைப்படத்தின் மூலமாக அஜீத் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அஜீத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் இப்போது ஷாலினி அஜீத் […]

Continue reading …

ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

Comments Off on ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

பி.டி.உஷா முதல் முதலாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 26ம் தேதி இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பி.டி.உஷாவை தவிர வேறு யாருமே இத்தேர்தலில் […]

Continue reading …

இறுதிச்சடங்கில் 14 பேர் பலி!

Comments Off on இறுதிச்சடங்கில் 14 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்காவில் இறுதிச் சடங்கின் போது நிலச்சரிவு போது 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் வயதான ஒருவர் காலமானதையடுத்து அவரை மண்ணில் புதைக்க இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டு மண் சரிந்தது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பலரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக் குழுவினர் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டனர். தற்போது […]

Continue reading …

தமிழக -கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்?

Comments Off on தமிழக -கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்?
தமிழக  -கேரள எல்லையில் வாகனங்கள் திடீர் நிறுத்தம்?

திடீரென தமிழக மற்றும் -கேரள எல்லையில் அரசு பேருந்துகள் உட்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மற்றும் கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. எனவே வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள […]

Continue reading …