
திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கே வரமுடியாது என்று சொல்லும் காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகை தெருவில் இறங்கி தான் நடித்த படத்தின் போஸ்டரை ஒட்டியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நீரஜா “மஞ்ச குருவி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சாலையில் இறங்கி நீரஜா போஸ்டர் ஒட்டினார். அப்போது நீங்கள் ஏன் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று ஒரு நபர் கேள்வி கேட்டபோது, “நான் […]
Continue reading …
ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு “ஜெயிலர்” திரைப்பட ஷூட்டிங்கின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினி, ஒரு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட ஒருசிலர் இதில் நடித்து வருகின்றனர். தற்போது சிவராஜ்குமார் இணைந்துள்ளதால் படம் இன்னும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர் மற்றும் ஜிலிம்ப்ஸ் வீடியோவில் வெளியாகி […]
Continue reading …
கோவா திரைப்பட விழா தேர்வு குழுவினர்களில் ஒருவரான நாடவ் என்பவர், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்” திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கூறியுள்ளார். இவர் கூறிய கருத்திற்குகடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் தூதர் நாடவ் பேச்சுக்கு தனது மன்னிப்பை கேட்டுள்ளார். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அதற்குண்டான பதிலில், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நாடவ் விமர்சனம் செய்தது வெட்கக் கேடானது. சித்திவிநாயகர் அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் […]
Continue reading …
மாவட்ட நிர்வாகம் திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் டிசம்பர் 6ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து தீபத்திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட […]
Continue reading …
புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னர் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும், வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கனிமொழியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “கவர்னர் பதவியே ஒரு காலாவதியான பதவி, ஒரு மாநிலத்திற்கு கவர்னர் இல்லாமல் இருந்தால் சட்டங்கள் உடனடியாக இயக்கப்படும்” என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியின் இப்பேச்சுக்கு, “தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என ஆவேசமாக கூறியுள்ளார். முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 350 மதுபான கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது. மதுபான ஆலைகளுக்கு அரசு மேலும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து இன்னும் சில நாட்களில் புதுச்சேரியில் சாராயக் கடல் ஓடும். கோவில்கள், […]
Continue reading …
குத்துச்சண்டை வீரர் ஒருவர் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. தற்போது அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் தனது எட்டாவது கோலை மெஸ்ஸி பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா அணியின் கொண்டாடி வரும் நிலையில் […]
Continue reading …
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமான நிலையத்தில் சேட்டிலைட் செல்போனை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விக்டர் சேமனோவ் (64) டேராடூன் விமான நிலையத்தில் சேட்டிலைட் போனை பயன்படுத்திய, புகைப்படங்கள் எடுத்தார். அப்போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் இதைப் பார்த்து அவரிடம் சேட்டிலைட் போன் பயன்படுத்தியது குறித்து விசாரித்தனர். அதற்கு அவர், “சேட்டிலைட் போனை இங்கு பயன்படுத்தக் […]
Continue reading …
தேவஸ்தான அதிகாரிகள் கோடிக்கணக்கில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூலாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் 1 கோடியே 4 இலட்சத்து 37ஆயிரத்து 557 ரூபாய் ரொக்க பணம் ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 544 கிராம் தங்கம் 6 கிலோ 576 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 465 காணப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாத […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில், மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது […]
Continue reading …