Home » Entries posted by Shankar U (Page 401)
Entries posted by Shankar

சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி?

Comments Off on சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி?
சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி?

சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை சமந்தா. ஆனால் கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். அதனால்தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின. சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்ட அவர் மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரமாக […]

Continue reading …

பிரபல தயாரிப்பாளரின் தகவல்!

Comments Off on பிரபல தயாரிப்பாளரின் தகவல்!

நடிகர் அஜீத்தின் “துணிவு” மற்றும் நடிகர் விஜய்யின் “வாரிசு” ஆகிய திரைப்படங்களுக்காக எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகைக்கு நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத் இவர்கள் இருவரின் படங்களும் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதற்கு 800 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் “வாரிசு” திரைப்படத்திற்கு லலித் சார்பில் இன்னும் தியேட்டர்கள் கைப்பற்றவில்லை என ரசிகர்கள் […]

Continue reading …

ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ் பேட்டி!

Comments Off on ஆளுனரை சந்தித்த ஈபிஎஸ் பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரை சந்தித்த பின்பு தமிழகத்தில் திறமையற்ற பொம்மை அரசு என்று கூறியுள்ளார். ஆளுனரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார்” என்று கூறினார்.

Continue reading …

கல்லூரி ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்!

Comments Off on கல்லூரி ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்!

சமீபத்தில் பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 30ம் தேதி மதுரையில் பெண்கள் கல்லூரியில் நுழைந்த சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் உள்ளிட்ட 10 பேர் ரகளையில் ஈடுபட்டனர். இதை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோர்களும் தாக்கப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் 10 பேர் கைதான நிலையில் அவர்களில் சூர்யா, அருண், அருண் பாண்டியன், மதுநவீஸ் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் […]

Continue reading …

அமைச்சர் வீட்டில் ரெய்டு!

Comments Off on அமைச்சர் வீட்டில் ரெய்டு!

வருமான வரித்துறையினர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முக்கிய அமைச்சர் வீட்டில் ரெய்டு செய்யப்படுவதால் அம்மாநில முதல்வர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் தெலுங்கானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டொவின் வீட்டில் இன்று காலை திடீரென சோதனை செய்தனர். அமைச்சரின் மகன் மகேந்திர ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர் ஆகியோர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டனர். அமைச்சரின் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை செய்து வருவது அம்மாநிலத்தில் பரபரப்பில் இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர […]

Continue reading …

முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

Comments Off on முன்னாள் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

முன்னாள் பிரதமர் ஒருவர் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பாகிஸ்தான்- மற்றும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படாது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த போது “இந்தியாவில் பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லுறவை நாங்கள் விரும்பினாலும் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டி விடுவதால் இரு நாட்டிற்கும் இடையே […]

Continue reading …

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா?

Comments Off on ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா?

நடிகர் சூர்யா தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விமான நிறுவன அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “சூரரை போற்று” படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா தற்போது “சூரரைப்போற்று” படத்தின் ஹிந்தி ரீமேக்கை […]

Continue reading …

பிரபல பாடல் ஆசிரியர் வெளியிட்ட தகவல்!

Comments Off on பிரபல பாடல் ஆசிரியர் வெளியிட்ட தகவல்!

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என்பது பற்றிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீடு பற்றியும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஜிப்ரான் இசையில் படத்தில் […]

Continue reading …

பிரபல நடிகரின் ரூ.100 கோடி வீடு பரிசு?

Comments Off on பிரபல நடிகரின் ரூ.100 கோடி வீடு பரிசு?

தனது காதலிக்காக பிரபல நடிகர் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா ஒன்றை பரிசாக கொடுத்ததற்காக அவரே விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அவர் நடிகையும் பாடகியுமான சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையிலுள்ள முக்கிய பகுதிகளில் உள்ள பங்களா வீட்டை நூறு கோடி ரூபாய்க்கு வாங்கி தனது காதலி சபா ஆசாத்துக்கு ஹிருத்திக் ரோஷன் […]

Continue reading …

சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

Comments Off on சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரானார். அதன்பின் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சினேகனுக்கு தன் தலைமையில் திருமணமும் நடத்திவைத்தார் நடிகர் கமலஹாசன். தற்போது சினேகனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சினேகன் கட்சியை விட்டி வெளியேறி சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆலோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continue reading …