Home » Entries posted by Shankar U (Page 402)
Entries posted by Shankar

புதிய மோசடி குறித்து மின்சார வாரியம் எச்சரிக்கை!

Comments Off on புதிய மோசடி குறித்து மின்சார வாரியம் எச்சரிக்கை!

ஆன்லைனில் மின்கட்டணம் கட்டலாம் என்ற வசதியை பயன்படுத்தி மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திமுக பிரமுகரான பத்மப்ரியாவின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. மின்சார கட்டணத்தை கட்டாததால் மின் இணைப்பு இன்று இரவு நிறுத்தப்படும் என்றும் அதற்கு முன்னால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஒரு எண் இருந்துள்ளது. அதை தொடர்பு கொண்டபோது சிலர் இந்தியில் பேசியுள்ளனர். இதுகுறித்து பத்மப்ரியா டுவிட்டரில் டாங்கெட்கோவை […]

Continue reading …

ஆம் ஆத்மி கட்சியினரிடையே மோதல்!

Comments Off on ஆம் ஆத்மி கட்சியினரிடையே மோதல்!

டில்லியில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரை அவரது கட்சியினரே சட்டையை பிடித்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சம்பித் பத்ரா என்பவர் தனது கட்சித் தொண்டர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அக்கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவின் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது கட்சியினரே சென்றனர். மேலும் அவர் மீது தாக்குதல் […]

Continue reading …

வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை!

Comments Off on வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை!

வானிலை மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, தெற்கு ஆந்திராவில் பகுதியாக வலுவிழந்துள்ளது. எனவே, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் சென்னை மற்றும் […]

Continue reading …

செஞ்சிலுவை சங்கத்தின் சொத்துகள் முடக்கம்!

Comments Off on செஞ்சிலுவை சங்கத்தின் சொத்துகள் முடக்கம்!

செஞ்சிலுவை சங்கத்தின் 3.37 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ளது. இச்சங்கத்தின் நிர்வாகிகள் சொந்தமான ரூ.3.37 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ம் ஆண்டு இது குறித்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இவ்வழக்கின் அடிப்படையில் தற்போது செஞ்சிலுவை சங்கத்தின் கிளைகள் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் […]

Continue reading …

ஒன்றரைக் கோடி முட்டைகள் கத்தாருக்கு எற்றுமதி!

Comments Off on ஒன்றரைக் கோடி முட்டைகள் கத்தாருக்கு எற்றுமதி!

நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால் பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு 1கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. உலகளவில் முட்டை உற்பத்தியில் துருக்கி முன்னணியில் உள்ள நிலையில், தற்போது அங்கு ஓரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளதையடுத்து, நாமக்கல் முட்டைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

Continue reading …

பேருந்து மற்றொரு பேருந்தின் மீது மோதல்!

Comments Off on பேருந்து மற்றொரு பேருந்தின் மீது மோதல்!

ஒரு பேருந்து ஓட்டுனர் மற்றொரு பேருந்தின் மீது ரிவர்ஸ் எடுத்து மோதியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பொதுவாக அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து எடுப்பது தொடர்பாக பிரச்சனைகள் வரும். சில நேரங்களில் வாக்கு வாதங்கள் முற்றி, இதன் மூலம், பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். அவ்வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரு பேருந்து மற்றோரு பேருந்து மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து […]

Continue reading …

இளம்பெண் உயிரிழப்பு!

Comments Off on இளம்பெண் உயிரிழப்பு!

இளம்பெண் ஒருவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுசியா என்பவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எட்டு நாட்களில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனுசியாவுக்கு குழந்தை பிறப்புக்கு பின்னர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனுசியா குடும்பத்தினர் அளித்த புகாரின் […]

Continue reading …

பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா?

Comments Off on பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா?

2026 சட்டமன்ற தேர்தலின்போது பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கூறப்படும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Continue reading …

பாபா படம் ரீ-ரிலீஸ்!

Comments Off on பாபா படம் ரீ-ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாபா” திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் “பாபா.” இப்படத்தை “பாட்ஷா,” “வீரா” படங்களை […]

Continue reading …

ஆதார் அட்டைக்கு பணம் என்ற வதந்தி!

Comments Off on ஆதார் அட்டைக்கு பணம் என்ற வதந்தி!
ஆதார் அட்டைக்கு பணம் என்ற வதந்தி!

மத்திய அரசு ஆதார் அட்டை வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன் வழங்குவதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்று என்ற நிலையில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இணைத்து ஒரு வதந்தி பரவி வருகிறது. அவ்வகையில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 4.78 லட்சம் ரூபாய் மத்திய அரசு […]

Continue reading …