ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நள்ளிரவு 1.29 மணிக்கு திடீர் நிலநடுக்கம். பாலியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது முன்னதாக ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் இரவு 11.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் சக்தி குறைந்த இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் திடீர் நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் […]
Continue reading …திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை. உயிரிழந்த ராதாகிருஷ்ணனும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார் பெண்ணின் உறவினர்கள் போலீசில் சென்று புகாரளிக்க, நேற்று காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் […]
Continue reading …திருச்சி கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மையா? என ஆய்வு செய்ய உத்தரவு!! திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் விதிமீறல்கள் நடைபெற்றது உண்மையா? என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கல் குவாரியில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Continue reading …மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்- காவல்துறை எச்சரிக்கை. மயிலாடுதுறை: கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. சாலையில் சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை. சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தல். மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைத் தேடும் பணியில் தீயணைப்பு, வனத்துறை, காவலர்கள் என 50 பேர் கொண்ட குழு. சிறுத்தை நடமாடிய […]
Continue reading …*அரவிந்த் கெஜ்ரிவால்-ன் ஐபோனை திறக்க உதவி கோரிய அமலாக்கத்துறை.. கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்.* *கைதாகி சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஐபோனை திறக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவிய நாடியது அமலாக்கத்துறை. செல் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் எங்களால் அதை திறக்க முடியாது என ஆப்பிளுடன் கை விரித்து விட்டது.*
Continue reading …*தமிழகத்தில் முதல்வர்* *மு.க.ஸ்டாலின் தலைமையிலான* *இந்தியா கூட்டணிக்கு* *பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு* திராவிட முன்னேற்றக் கழக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது* ; தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நல்லாட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக்கொண்டிருகிறார். சொன்னதை செய்யும் முதல்வரான மு.க.ஸ்டாலின் 2021 ல் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்த வாக்குறுதிகளான ….. குடும்ப […]
Continue reading …தாய்வான் நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள். கட்டிடங்கள் இடிந்து சேதம். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் தைவானில் கட்டடங்கள் […]
Continue reading …அலைகடலென திரண்ட கடலூர் மாவட்ட மக்கள். தங்கர்பச்சனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம். இந்த மண்ணின் மைந்தர், இங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க நான் எவ்வளவு வெறியுடன் இருக்கிறேனோ அதே அளவு வெறியுடன் இருப்பவர் தங்கர் பச்சான் அவர்கள், அவருக்கு தெரியாத பிரச்சினைகளே இல்லை. அவரை கட்சிகள் கடந்து, சாதி, மத, இன,மொழி பாகுபாடு கடந்து ஒரு பொது வேட்பாளராக அனைவரும் ஆதரியுங்கள், உங்களுக்கு சேவை செய்யவும், இந்த மண்ணையும் மக்களையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே […]
Continue reading …முதுகுளத்தூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியாபாண்டியன் அதிமுகவில் சேர்ந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர், மலேசியா.பாண்டியன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
Continue reading …