ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் – பிரதமர் மோடி!

Filed under: இந்தியா |

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டை தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இது அனைத்து இந்தியர்களுக்கு பெருமையை அளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும், ​​நான் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் உரையாடுவேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த கொரோனா சமயத்தில் என்னால் முடியவில்லை. ஆனால் 1 கோடி பயனாளியான மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தாபாவுடன் நான் தொலைபேசி தொடர்பு இதனை பற்றி உரையாடினோம்.