புதிதாக நியமிக்கப்பட்ட 1550 மருத்துவர்கள் –தமிழக அதிரடி உத்தரவு! சென்னையில் பணியாற்ற புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்றையை நாள் வரையிலான பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ தாண்டியுள்ளது. மேலும் தினசரி 1000 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு இன்னும் அதிக நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட கூடும். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பும் சூழ்நிலை உருவாகலாம். […]
Continue reading …சென்னையில் 6000 தெருக்களில் முழுக்கவனம்- அமைச்சர் அறிவிப்பு! சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 6000 தெருக்களில் முழுக்கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்றுகொண்டே உள்ளது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சென்னையில் தற்போது தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. சென்னையின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு […]
Continue reading …இந்தியாவில் செப்டம்பரில் கொரோனா முடிவுக்கு வரும் – ஆய்வு முடிவுகள்! இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் செப்டம்பர் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. நேற்று மட்டும் 10,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தொட்டு. உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது இத்தாலி மற்றும் […]
Continue reading …கொரோனாவில் இருந்து தப்பிக்க மூடநம்பிக்கை சடங்கு – நாக்கை இழந்த சிறுமி! உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க என்று சொல்லி சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாக்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக கொடூரமான மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அங்குள்ள சிவ்ஜி கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் […]
Continue reading …10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி! ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் அது சம்மந்தமான வழிகாட்டல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் தமிழக அரசு அதை […]
Continue reading …மூன்று நீதிபதிகளுக்குக் கொரோனா ! வழக்கு விசாரணையில் மீண்டும் வீடுகளில் இருந்து… சென்னையில் நீதிமன்றம் வந்து வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரடங்கு தளர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றங்களுக்கு வந்து வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் முன் வந்தார்கள். ஆனாலும் விசாரணை அரங்கில் நடக்காமல், நீதிபதிகளின் அறைகளிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை நீதிமன்றங்களில் 3 நீதிபதிகள், […]
Continue reading …ஜெ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – செயற்கை சுவாச அளவு குறைப்பு! கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை இரு தினங்களுக்குப் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வருவதால் […]
Continue reading …தமிழகத்தில் கொரோனா உச்சம் எப்போது ? அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில்தான் இருக்கும் என தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 – 1300 ஆக உள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தொட்டுள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ‘தமிழகத்தின் […]
Continue reading …ஸ்வதேஸ் திட்டம் – வெளிநாடுகளில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு! கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஸ்வதேஸ் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் கோடிக்கணக்கானவர்கள் உலகம் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அந்தவகையில் வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வந்த இந்தியர் பலரும் தங்கள் வேலைகளை இழந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுவரை கிட்டதட்ட அரபு நாடுகளில் இருந்து மட்டும் 80,000 பேர் […]
Continue reading …டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசுவதால் அவரை ப்ரமோட் செய்யமாட்டோம் என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறிக் காரணமாகக் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து அதிகரிக்கும் போராட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் கருத்துகள் நிறவெறியைத் தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அவரின் டிவீட் ஒன்றை டிவிட்டர் நிர்வாகம், கொள்கைகளுக்கு எதிரானது […]
Continue reading …