Home » Archives by category » அரசியல் (Page 30)

கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி!

Comments Off on கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி!

உத்தரப் பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. 2019ல் அசம்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அகிலேஷ், 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் மீண்டும் கன்னூஜ் தொகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னூஜ் தொகுதி அகிலேஷ் யாதவ்வின் குடும்ப தொகுதி போன்றது. […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்?

Comments Off on காங்கிரஸ் கட்சியில் மன்சூர் அலிகான்?

நடிகர் மன்சூர் அலிகான் ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மன்சூர் அலிகான் சந்தித்தார். ராகுல் காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் […]

Continue reading …

அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

Comments Off on அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் இன்று ஏப்-19ம் தேதி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, […]

Continue reading …

வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

Comments Off on வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

வேங்கை வயல் உள்பட இரண்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட அந்த கிராம மக்கள் வர முடியாது என்று கூறியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கோபம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்த கோபத்தை அப்பகுதி மக்கள் தேர்தலில் காட்டி வருவதாக தெரிகிறது. வேங்கை வயல் மற்றும் இறையூர் ஆகிய […]

Continue reading …

ஈபிஎஸ் எடுத்த தப்புக்கணக்கு அவருக்கு புரியும்; சசிகலா!

Comments Off on ஈபிஎஸ் எடுத்த தப்புக்கணக்கு அவருக்கு புரியும்; சசிகலா!

சசிகலா மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி போட்ட தப்புக்கணக்கு அவருக்கு புரியும் என்று பேட்டியளித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள். சசிகலா தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம், “மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் போட்ட தப்புக்கணக்கு அவர்களுக்கே புரியும்” எடப்பாடி பழனிச்சாமியை […]

Continue reading …

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் கலவரம்!

Comments Off on வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் கலவரம்!

மணிப்பூரில் இன்று மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை முதலே தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வன்முறை நிகழ்ந்து வருவதால் கூடுதல் பாதுகாப்புடன் அங்கு காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் உள் மணிப்பூரின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Continue reading …

லண்டன் நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி!

Comments Off on லண்டன் நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி!

இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக லண்டனிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் லண்டனில் வசித்து வந்தவர் தனது வாக்கினை பதிவு செய்ய […]

Continue reading …

தேர்தல் புறக்கணிப்பால், வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையங்கள்!

Comments Off on தேர்தல் புறக்கணிப்பால், வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையங்கள்!

இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டி அருகே இரயில் பாதையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுவதுடன் 10% ஒட்டு மட்டுமே பதிவாகியுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கிலியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மதுரை – போடி […]

Continue reading …

ஓபிஎஸ்ஸின் உறுதி!

Comments Off on ஓபிஎஸ்ஸின் உறுதி!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தங்கள் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர […]

Continue reading …

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

Comments Off on எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

திமுக எம்.பி தயாநிதி மாறன் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறிய தயாநிதி மாறன், மன்னிப்பு கேட்க 24 மணி நேரம் அவகாசம் கொடுத்த […]

Continue reading …