Home » Archives by category » இந்தியா (Page 29)

கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

Comments Off on கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீரை பெற திராணி அற்ற இந்த விடியா […]

Continue reading …

செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்!

Comments Off on செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்!

பிரதமர் மோடி உலகளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். பின் பேசிய பிரதமர் மோடி, “உலகளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது. 3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் […]

Continue reading …

2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

Comments Off on 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

வரவிருக்கும் விரைவில் மக்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக சமீபத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் 2024-க்காக 2ம் கட்ட வேட்பாளர் […]

Continue reading …

ஹரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது பாஜக அரசு.

Comments Off on ஹரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது பாஜக அரசு.

ஹரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது பாஜக அரசு. மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு. சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை பிடித்தது புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயாப் சிங் சைனி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.

Continue reading …

தேர்தல் பத்திரம் குறித்து ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு!

Comments Off on தேர்தல் பத்திரம் குறித்து ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு!

உச்சநீதிமன்றம் நாளை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தாக்க செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளிப்பதை சமீபத்தில் தடை செய்தது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்தவர் விவரங்களை அளிக்கக் கோரி எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ கோரிக்கை விடுத்த நிலையில் நாளைக்குள் எஸ்பிஐ தேர்தல் பத்திர ஆவணங்களை தாக்கல் செய்ய […]

Continue reading …

தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது: கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்!

Comments Off on தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது: கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்!

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் “கர்நாடக மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து […]

Continue reading …

LCA போர் விமானம் விழுந்து நொறுங்கியது!

Comments Off on LCA போர் விமானம் விழுந்து நொறுங்கியது!

ராஜஸ்தான் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகிறது. இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். இந்த விமானம் முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் முதன்முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue reading …

இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

Comments Off on இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. […]

Continue reading …

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.   

Comments Off on உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.   

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரமோத் யாதவ் 2012 சட்டமன்றத் தேர்தலில் ஜான்பூரின் மல்ஹானி தொகுதியில் பலம் வாய்ந்த தனஞ்சய் சிங்கின் மனைவி ஜாக்ரிதி சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டார்.  இத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் பரஸ்நாத் யாதவ் வெற்றி பெற்ற நிலையில், ஜக்ரிதி சிங் 2வது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில் தான் பிரமோத் யாதவ் சுட்டு கொல்லப்பட, இதுவரை யார் மீதும் குற்றச்சாட்டுகள் […]

Continue reading …