Home » Archives by category » இந்தியா (Page 66)

மணமகனை 20கிமீ துரத்திப் பிடித்த மணமகள்!

Comments Off on மணமகனை 20கிமீ துரத்திப் பிடித்த மணமகள்!

திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணமகன் மண்டத்திற்கு வராமல் ஓட முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பதான் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞருக்கு இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்ய குடும்பத்தில் உள்ளவர்கள் முடிவெடுத்தனர். இருவீட்டாரின் கலந்துபேசி ஞாயிற்றுக்கிழமையன்று பூதேஸ்வர நாத் கோயிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். திருமண தினத்தன்று மணமகன் வெகு நேரமாகியும் மேடைக்கு வரவில்லை. மணப்பெண் திருமணத்திற்குக் காத்திருக்கும்போது, போனில் […]

Continue reading …

‘மோடி’ மாம்பழம் காஸ்ட்லியா?!

Comments Off on ‘மோடி’ மாம்பழம் காஸ்ட்லியா?!

உபேந்திரா சிங் என்பவர் கண்டுபிடித்த பிரதமர் பெயரிலான மாம்பழம் விரைவில் உத்தரபிரதேசத்திலிருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பழங்கள், காய்கறிகளில் ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஆய்வு செய்து பல புதிய ரகங்களை வேளாண் ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த உபேந்திரா சிங் என்பவர் அப்பகுதியில் விளையும் புகழ்பெற்ற துஸ்ஸேரி மாம்பழத்துடன் உள்ளூர் மாங்கனிகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை தயாரித்துள்ளார். பிரதமர் மோடியின் பெயரிடப்பட்ட இந்த புதிய மாம்பழ […]

Continue reading …

விமானப்படையின் திடீர் முடிவு!

Comments Off on விமானப்படையின் திடீர் முடிவு!

இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட்டு வரும் மிக் 21 ரக போர் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படையில் பல்வேறு ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரபலமான ஒன்று மிக் 21 ரக போர் விமானங்கள். சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மிக்21 ரக போர் விமானங்கள் கடந்த 1960ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த சில காலமாக இந்த மிக் 21 […]

Continue reading …

2 ஆயிரம் குறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

Comments Off on 2 ஆயிரம் குறித்து எஸ்பிஐ வங்கி அறிவிப்பு!

எஸ்பிஐ வங்கி இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. 2016ம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான விதிமுறைகளை பல வங்கிகளும் […]

Continue reading …

மத்திய அரசு பணிகளில் தனியார் துறை ஆட்கள்!

Comments Off on மத்திய அரசு பணிகளில் தனியார் துறை ஆட்கள்!

மத்திய அரசு பணியிடங்கள் சிலவற்றை தனியார் துறைகள் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யூபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு ஆட்கள் அமர்த்தப்படுவது வழக்கம். சமீபத்தில் மத்திய அரசின் 12 துறைகளில் உள்ள இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான பணியிடங்களை தனியார் துறை நிபுணர்களை கொண்டு நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு […]

Continue reading …

பப்ஜி கேம்க்கு மீண்டும் அனுமதி

Comments Off on பப்ஜி கேம்க்கு மீண்டும் அனுமதி

சீன வீடியோ கேமான பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவில் அனுமதி பெற்றுள்ளது. இளைஞர்களிடையே வீடியோ கேம் விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. சில ஆண்டுகள் முன்பு வரை அதிகமான இளைஞர்களால் விளையாடப்பட்ட ஆன்லைன் கேம்தான் பப்ஜி. சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருந்த இந்த கேம் மூலம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், அதன் சர்வர்களில் பிரச்சினை உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனால் இந்த கேமை இந்திய அரசு தடை செய்தது. அதன்பின்னர் குறைகளை சரி செய்து […]

Continue reading …

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு மம்தா பானர்ஜி கருத்து!

Comments Off on “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு மம்தா பானர்ஜி கருத்து!

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்திலுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க […]

Continue reading …

7 உலக அதிசயங்களை 6 நாட்களில் சுற்றி சாதனை!

Comments Off on 7 உலக அதிசயங்களை 6 நாட்களில் சுற்றி சாதனை!

6 நாட்களில் உலகின் 7 அதிசயங்கள் என வர்ணிக்கப்படும் 7 பகுதிகளை பிரிட்டனை சேர்ந்தவர் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பண்டைய மக்களால் உலகம் முழுவதிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான கட்டிட, கட்டுமான அதிசயங்கள் உள்ளன. அவற்றில் உலகின் 7 அதிசயங்களாக இந்தியாவில் உள்ள தாஜ்மஹால், சீன பெருஞ்சுவர், இத்தாலியில் உள்ள கொலிஜியம், ரியோவில் உள்ள இயேசு சிலை, பெரு நாட்டில் உள்ள மச்சுபிச்சு, மெக்ஸிகோவில் உள்ள சிச்சென் இட்ஸா மற்றும் ஜோர்டனில் உள்ள பெத்ரா ஆகிய […]

Continue reading …

முதலமைச்சர் பதவிக்காக சண்டைவரும்; முன்னாள் அமைச்சர்!

Comments Off on முதலமைச்சர் பதவிக்காக சண்டைவரும்; முன்னாள் அமைச்சர்!

கடந்த 10ம் தேதி 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, காங்கிரஸ் 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி […]

Continue reading …

இளைஞர் மீது தாக்குதல்!

Comments Off on இளைஞர் மீது தாக்குதல்!

மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் பிர்பஹூரி பகுதியில் வசிக்கும் சாகர் குமார் மிஸ்ரா கல்லூரியில் படித்து வருகிறார். தன்னுடன் படித்து வரும் தோழியை நேற்று மாலை தன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர் மிஸ்ரா, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தோழியுடன் பைக்கில் சென்றபோது, அப்பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர் சிலர், இருவரையும் […]

Continue reading …