Home » Archives by category » சென்னை (Page 21)

சென்னை ஐஐடியில் 3 மாதங்களில் 4வது தற்கொலை!

Comments Off on சென்னை ஐஐடியில் 3 மாதங்களில் 4வது தற்கொலை!

கடந்த 3 மாதங்களில் சென்னை ஐஐடி வளாகத்தில் 3 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. தற்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேதார் சுரேஷ் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர்இன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் எந்தவித கடிதமும் எழுதி […]

Continue reading …

சென்னை பாரிமுனையில் கட்டிடம் விழுந்து விபத்து!

Comments Off on சென்னை பாரிமுனையில் கட்டிடம் விழுந்து விபத்து!

சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. பழமையான கட்டடம் சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது. இக்கட்டத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்ததுள்ளது. இன்று அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கியுள்ளதாகவும் […]

Continue reading …

மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

Comments Off on மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சாலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இதை அரசியலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தை கட்டுமானம் முடியும் […]

Continue reading …

ஐபிஎல் போட்டி: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

Comments Off on ஐபிஎல் போட்டி: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்-2023 &16வது சீசன் தற்போது நடைபெறுகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இம்முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ளது. அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் டிரோன்கள் உயர்நீதிமன்றத்தின் மீது பறக்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை டிரோன் கேமராமூலம் படம் எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த […]

Continue reading …

கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

Comments Off on கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

சென்னை பல்லாவரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 2 நாள் சுற்றுப்பயண தென்மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரமர் மோடி. இன்று சென்னைக்கு விமான நிலைய புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு […]

Continue reading …

பிரதமர் மோடி சென்னை வருகை!

Comments Off on பிரதமர் மோடி சென்னை வருகை!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள அவர் “தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்’’- என்று பேசியுள்ளார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அங்கு, ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் […]

Continue reading …

நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

Comments Off on நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

பொதுமக்கள் நாளை சென்னை மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை பிரதமர் மோடி நாளை தமிழகம் வந்து சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துவிட்டு அவர் முதுமலை செல்லவுள்ளார். நாளை பிரதமர் வருகையையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு பதிலாக அவர் சென்னை மெரினாவில் […]

Continue reading …

மோடிக்கு கருப்புக்கொடியா?

Comments Off on மோடிக்கு கருப்புக்கொடியா?

காங்கிரஸ் கட்சி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை – கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தமிழக வரும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் […]

Continue reading …

ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு!

Comments Off on ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் முக்கிய சாலைகளான சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் ஆகிய 2 சாலைகளையும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் பணி ரூபாய் 18 கோடியில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் & இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் […]

Continue reading …