Home » Archives by category » சென்னை (Page 30)

சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு?

Comments Off on சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு?

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளிவந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இச்சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னையிலுள்ள 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் […]

Continue reading …

நீதிமன்றத்தில் ஆன்லைன் குறித்து புதிய மனு!

Comments Off on நீதிமன்றத்தில் ஆன்லைன் குறித்து புதிய மனு!
நீதிமன்றத்தில் ஆன்லைன் குறித்து புதிய மனு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில் இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைத்து, அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. தற்போது மும்பையை சேர்ந்த ஆல் இந்தியா கேமிங் பெடரேஷன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய […]

Continue reading …

நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Comments Off on நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. நாளை முதல் தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 11-ம் தேதி அன்று கனமழை எச்சரிக்கை […]

Continue reading …

சினிமா பாணியில் நடந்த காதல் சம்பவம்!

Comments Off on சினிமா பாணியில் நடந்த காதல் சம்பவம்!

சினிமா பாணியில் சென்னையில் ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் கைதாகியுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடுவாஞ்சேரியில் வயர் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். அங்கேயே ரூம் எடுத்து அவர் தங்கியிருந்த நிலையில் அவருடன் கதிர், யுவராஜ் என இரண்டு இளைஞர்களும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவரை அந்த 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை இளைஞரின் […]

Continue reading …

மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது குண்டாஸ்!

Comments Off on மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது குண்டாஸ்!

கல்லூரி மாணவர் சதீஷ் சென்னை பெரம்பூரில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்த கல்லூரி மாணவர் சதீஷ் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர […]

Continue reading …

கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

Comments Off on கேன் வாட்டருக்கு டிமாண்ட் வருமா?

திடீரென தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். கேன் வாட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜம்புலிங்கம் தலைமையில் நடந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். லாரிகளில் தண்ணீர் எடுக்க உரிமை மறுப்பது லாரிகளை காவல்துறையினர் பிடிப்பது போன்றவற்றை கண்டித்து […]

Continue reading …

ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

Comments Off on ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

இன்று சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். இந்நிலையில் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை […]

Continue reading …

மத்திய அரசு திட்டம்!

Comments Off on மத்திய அரசு திட்டம்!

மத்திய அரசு இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூர் வரை இயங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் […]

Continue reading …

வடகிழக்குப் பருவமழைக்காக முதலமைச்சரின் உத்தரவு!

Comments Off on வடகிழக்குப் பருவமழைக்காக முதலமைச்சரின் உத்தரவு!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மழைக்காலத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததாவது: வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய பகுதிகளில் மிக கனமழை, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு, […]

Continue reading …

சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

Comments Off on சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

சென்னை மாநகராட்சி சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அவசர நிலைக்கு தொடர்புக் கொள்வதற்கு எண்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே சென்னை முழுதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகால் காரணமாக சில பகுதிகளில் வேகமாக மழைநீர் வடிந்துள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக […]

Continue reading …