பாஜக தலைவர் சென்னை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பேச்சாளர் சாதிக்கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி நடிகை குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த மன்னிப்பை ஏற்காத குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு […]
Continue reading …சென்னையில் போதைப்பொருள் வழக்கில் கைதானவர் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராயப்ப ராஜூ என்பவர் 48 கிலோ போதை பொருள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். மூன்றாவது மாடியில் இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது திடீரென 13வது மாடியிலிருந்து ராயப்ப ராஜூ கீழே குதித்து […]
Continue reading …சென்னை மெட்ரோ நிறுவனம் இன்று முதல் மெட்ரோ ரயில் கூடுதல் நேரங்களில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணத்தில் நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படுவது போல் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பீக் நேரத்தில் மட்டும் ஐந்து நிமிடம் இடைவேளை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இன்று முதல் காலை 4 மணி முதல் இரவு 11 […]
Continue reading …சொகுசு கார் ஒன்று சென்னை கோயம்பேடு அருகே திடீரென பற்றி எரிந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கோயம்பேடு மேம்பாலத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரின் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் கார் முழுவதிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரில் […]
Continue reading …சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்பவர் கல்லூரி மாணவி சத்யா என்பரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்”- என பதிவிட்டுள்ளார். சதீஷ் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, […]
Continue reading …10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நிலையில் தலைமறைவாகி உள்ளதையடுத்து அந்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகிலுள்ள மாணவர் அந்த மாணவியுடன் சகஜமாக பழகி உள்ள நிலையில் திடீரென மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்திற்கு காரமான பத்தாம் வகுப்பு […]
Continue reading …நாளை மெகா வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. வேலையில்லாத இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ கல்லூரியில் நாளை அதாவது அக்டோபர் 15ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள 300க்கும் […]
Continue reading …கல்லூரி மாணவி ஒருவரை மின்சார ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்து தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். மாணவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளாத தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த […]
Continue reading …சென்னை பல்கலைக்கழகம் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பில் 2015 மற்றும்- 2016 கல்வியாண்டிற்கு முன்பாகவும், முதுகலை படிப்பில் 2019 மற்றும்- 2020ம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வில் மேற்கண்ட கல்வி […]
Continue reading …சென்னை மற்றும் மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் முதல்முறையாக இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 10ம் தேதி முதல் வந்தே பாரத் சென்னை மற்றும் மைசூருக்கிடையே இயக்கப் போவதாகவும் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத் ரயில் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும்- மைசூர் இடையே 483 கிலோமீட்டர் […]
Continue reading …