ரூ.50 கட்டணத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதி ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இருந்தது. தற்போது மெட்ரோ ரயிலில் ரூபாய் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதியை பயணிகளுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். 100 ரூபாய் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ […]
Continue reading …பட்டாசு விற்பனை சங்கம் முதன்முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசுகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரியான விலையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் முதல் முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை தீவுத்திடலில் 114 பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் கடைகளை அமைக்க இருப்பதாகவும் அனைத்து கடைகளிலும் கூட்டுறவு […]
Continue reading …ஆண் நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் செய்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது பெரும்பான்மையான நேரத்தை ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்ற சிறு வீடியோக்களை செய்து வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலசமயம் இந்த ரீல்ஸ் மோகம் ஆபத்தாகவும் முடிந்து விடுவதுண்டு. அதுபோல் சென்னையில் அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி ஈஸ்வரி. கடந்த சில காலமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டிய ஈஸ்வரி அதில் ரீல்ஸ் செய்து […]
Continue reading …லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக, விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Continue reading …சென்னை மாநகராட்சி அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2022 மற்றும்- 2023ம் ஆண்டு காலம் முதல் அரையாண்டு சொத்து வரி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதேபோல் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை […]
Continue reading …எந்த இடத்தில் பைக் சாகசம் நிகழ்வு நடந்ததோ அந்த இடத்திலேயே விழிப்புணர்வில் ஈடுபட்டார் யூடிபர் கோட்லா பினோய். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் கூட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பல முறை எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் சென்னை, அண்ணாசலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல […]
Continue reading …ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை பள்ளிக்கரணையில் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பள்ளிக்கரணையிலுள்ள அம்பேத்கர் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்கள் ஆயுதங்களோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். அதற்குள் அங்கு ரவுடிகள் தப்பி சென்று விட்ட நிலையில் புதர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனை கொண்டு […]
Continue reading …சென்னை தி.நகரில் ஓடும் பஸ்ஸில் செருப்பு காலால் ஸ்கேட்டிங் செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். சமீப காலமாக தமிழகத்தில் மாணவர்கள் ரயிலிலும், பேருந்திலும் படியில் தொங்கியபடி சாகசம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பேருந்து, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எவ்வளவு கூறினாலும், ஆசிரியர்கள் எடுத்துரைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சில மாணவர்கள் நடந்து வருகின்றனர். சென்னையில் சில நாட்களுக்கு முன், தி.நகரிலிருந்து, செம்மஞ்சேரி செல்லும் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி […]
Continue reading …நன்றாக வேலை செய்த காரணத்தினால் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உடன் வேலை செய்த கட்டிட தொழிலாளியை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த வேளச்சேரி என்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் கட்டிட வேலை செய்து வந்தார்கள். அப்போது ஆனந்தன் என்ற கட்டிட தொழிலாளி மட்டும் நன்றாக வேலை செய்ததால் அவரை மேஸ்திரி பாராட்டியதோடு அவ்வப்போது கூடுதலாக அவருக்கு பணம் கொடுத்து வந்தார். ஆனால் அதே […]
Continue reading …11ம் வகுப்பு படிக்கும் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆசிரியர் கொடுத்த பள்ளி பாடங்களை சரியாகப் படிக்கவில்லை என்பதால், அவரை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி, தன் வீட்டிற்குப் பள்ளிக்குச் செல்வதுபோல் கிளம்பி பின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, துப்பட்டாவால் […]
Continue reading …