Home » Archives by category » சென்னை (Page 34)

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Comments Off on சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி சொத்துவரி மற்றும் தொழில் வரியை இம்மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்தாமலிருந்து வரும் சொத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் வரியை செலுத்தாதவர்களுக்கு இம்மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்குள் சொத்து […]

Continue reading …

நேற்று சென்னையில் திடீர் மழை!

Comments Off on நேற்று சென்னையில் திடீர் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு மழை பெய்ததை தொடர்ந்து இன்றும் மழை பொழியும் என தகவல் அளித்துள்ளது. நேற்றிரவு திடீரென சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்ததையடுத்து இன்றும் சென்னையில் இரவில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை மட்டுமின்றி அதன் […]

Continue reading …

383வது சென்னை தினம்!

Comments Off on 383வது சென்னை தினம்!

தமிழகத்தின் தலைநகரான சென்னை உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம். தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் […]

Continue reading …

ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!

Comments Off on ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!
ஐஐடி மாணவி சடலமாக மீட்பு!

சென்னை ஐஐடி மாணவி தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தலை, முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண் ஒடிஷா […]

Continue reading …

புதிய விமான நிலையம் கண்டிப்பாக தேவை!

Comments Off on புதிய விமான நிலையம் கண்டிப்பாக தேவை!

அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்று கூறியுள்ளார். புதிதாக சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் […]

Continue reading …

சென்னையில் 130 கடைகளுக்கு சீல்!

Comments Off on சென்னையில் 130 கடைகளுக்கு சீல்!

மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென்று ஆய்வு செய்து 130 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது. வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை தொகை நிலுவையில் இருந்த 130 கடைகளில் 40 லட்ச ரூபாய் வரவேண்டிய உள்ள […]

Continue reading …

மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

Comments Off on மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கம் அதிகமாகி உள்ளது. இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று சென்னை கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவர் அந்தோணி தினேஷ் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]

Continue reading …

அமைச்சர் மெய்யநாதன் புதிய தகவல்!

Comments Off on அமைச்சர் மெய்யநாதன் புதிய தகவல்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தற்போது மீண்டும் சர்வதேச போட்டி ஒன்று நடைபெற போவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். முதல்முறையாக சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப் போவதாக இருப்பதாகவும், நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12ம் தேதி சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி துவங்க இருப்பதாகவும் ஒரு வாரம் இப்போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் […]

Continue reading …

3 நாட்கள் விடுமுறையுடன் பிரியாணி!

Comments Off on 3 நாட்கள் விடுமுறையுடன் பிரியாணி!

டிஜிபி சைலேந்திர பாபு ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்தும், 3 நாட்களுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகமாக தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி முடிவடைந்தது. இதற்கான பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல […]

Continue reading …

நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

Comments Off on நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி […]

Continue reading …