தமிழகத்தின் தலைநகரான சென்னை உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம். தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் […]
Continue reading …சென்னை ஐஐடி மாணவி தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தலை, முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண் ஒடிஷா […]
Continue reading …அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்று கூறியுள்ளார். புதிதாக சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் […]
Continue reading …மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென்று ஆய்வு செய்து 130 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்பட்டது. வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை தொகை நிலுவையில் இருந்த 130 கடைகளில் 40 லட்ச ரூபாய் வரவேண்டிய உள்ள […]
Continue reading …சென்னையில் 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கம் அதிகமாகி உள்ளது. இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று சென்னை கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவர் அந்தோணி தினேஷ் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]
Continue reading …செஸ் ஒலிம்பியாட் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தற்போது மீண்டும் சர்வதேச போட்டி ஒன்று நடைபெற போவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். முதல்முறையாக சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப் போவதாக இருப்பதாகவும், நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12ம் தேதி சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி துவங்க இருப்பதாகவும் ஒரு வாரம் இப்போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உலக மகளிர் டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் […]
Continue reading …டிஜிபி சைலேந்திர பாபு ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்தும், 3 நாட்களுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகமாக தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி முடிவடைந்தது. இதற்கான பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல […]
Continue reading …சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி […]
Continue reading …400 கிலோ குட்கா தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா போதைப்பொருள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர பரிசோதனை செய்து பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வகையில் பெங்களூரிலிருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதை பொருளை கடத்தி […]
Continue reading …காவலர் ஒருவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பணியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சென்னையில் நடைபெற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக வருகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடந்தது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடத்தப்பட உள்ளது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக காவலர்களும் பணியில் […]
Continue reading …