Home » Archives by category » சென்னை (Page 6)

சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Comments Off on சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

தென்னக ரயில்வே துறை சார்பாக சென்னையின் முக்கிய பகுதியில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 26) […]

Continue reading …

மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்!

Comments Off on மின்சார ரயில் டிக்கெட் எடுக்க செயலி அறிமுகம்!

ஆன்லைனில் ஏற்கனவே மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மின்சார ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் எடுக்கவும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மின்சார ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தற்போது யூடிஎஸ் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் மின்சார ரயிலுக்கான டிக்கெட்டுகளை வரிசையில் காத்திருக்காமல் எளிதில் ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்து […]

Continue reading …

இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

Comments Off on இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம் “வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளது. இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி தனது பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி […]

Continue reading …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை!

Comments Off on சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை!

26 வயது இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அப்பெண் யார் என்பதை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணத்தை கைப்பற்றி காவல் துறையினர் அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பெண்ணின் கையில் செல்போன் […]

Continue reading …

சென்னையின் 16 சட்டமன்ற தொகுதியில் மகளிர் மட்டும்!

Comments Off on சென்னையின் 16 சட்டமன்ற தொகுதியில் மகளிர் மட்டும்!

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் மட்டும் இருக்கும் இந்த பிங்க் வாக்குச்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிங்க் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு […]

Continue reading …

ரூ.54,000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை!

Comments Off on ரூ.54,000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று மீண்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ…. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 […]

Continue reading …

தூங்கியவரை எழுப்பி கொலை செய்த மர்ம நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

Comments Off on தூங்கியவரை எழுப்பி கொலை செய்த மர்ம நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை எழுப்பி மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த் தனது தாயார் சத்யாவுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து விட்டு இரவு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று அவரது வீட்டின் கதவை தட்டியது, இதையடுத்து விஜயகாந்த் எழுந்து கதவை திறந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த மர்ம கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பி […]

Continue reading …

சென்னை -நெல்லை ரயில் குறித்த விவரங்கள்!

Comments Off on சென்னை -நெல்லை ரயில் குறித்த விவரங்கள்!

தெற்கு ரயில்வே சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கோடைக்கால விடுறையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு […]

Continue reading …

சென்னை -நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்!

Comments Off on சென்னை -நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்!

தென்னக ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இடையே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் தேர்வு முடிவடையும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வேயின் செய்தி குறிப்பில், சென்னை, எழும்பூரில் இருந்து வரும் ஏப்.5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 தேதிகளில் காலை […]

Continue reading …

வடசென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை?

Comments Off on வடசென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை?

வருமானவரித்துறையினருக்கு வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் பரிசு பொருள்கள் தரப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானதால் அத்தொகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர். வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் வழங்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை முதல் […]

Continue reading …