
தற்போது ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டணத்தை வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டுள்ளது. விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ […]
Continue reading …
கடன் வாங்கியவர்களை மிரட்டுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி உள்ளார். ஒரு லட்சம் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று அவர் மிரட்டப்பட்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது உடலை […]
Continue reading …
அரசு தேர்வு துறை இயக்ககம் தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுப்பாவிட்டால் அந்த பள்ளிகளின் முடிவுகள் வெளியிடப்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த விடைத்தாள்களை பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களை திருத்தி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு தேர்வு இயக்ககம் […]
Continue reading …
அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் […]
Continue reading …
புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகுமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கொண்டாடினார். தமிழகம் முழுதும் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் […]
Continue reading …
ஒரு ஆய்வில் பொதுநீச்சல் குளத்தில் சராசரியாக 72 லிட்டர் சிறுநீர் கலந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் சிறு குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புவதற்கு ஆர்வப்படுகின்றனர். இதனால் நீச்சல் பயிற்சி பள்ளிகள் பெரிய நகரங்களில் நல்ல வருமானம் உள்ள தொழிலாக உள்ளது. நீச்சல் குளங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் பொது நீச்சல் குளத்திலுள்ள […]
Continue reading …
பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரையாக்கவேண்டும் என்று பேசியுள்ளார். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேசிய போது, “அமைச்சர் உதயநிதியின் உழைப்பு ஒரு துறையோடு நின்று விடக்கூடாது. முதலமைச்சருக்கு துணை நின்று அனைத்து துறைகளின் பணிகளையும் உதயநிதி மேற்கொள்ள வேண்டும். அமைச்சராக பதவியேற்று பலரும் பாராட்டுத்தக்க வகையில் உதயநிதி செயலாற்றி வருகிறார்” என்று அவர் உதயநிதியை […]
Continue reading …
டிடிவி தினகரன் டுவிட்டரில், “ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும்’’- என்று பதிலளித்துள்ளார். இன்று திமுக சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்று தெரிவித்தார். இது, அதிமுகவினர் […]
Continue reading …
காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநகராட்சி அந்தஸ்தை தற்போது காரைக்குடி பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1928ம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது காரைக்குடி நகராட்சியாக உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின் தேர்வுநிலை நகராட்சியாகவும் தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் காரைக்குடி உயர்ந்துள்ளது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கும் நிலையில் அங்கு ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியின் ஆண்டு வருமானம் 50 கோடிக்கு மேல் உள்ளது. போக்குவரத்து கழகம் […]
Continue reading …
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தற்போது வெளியான தகவலின் படி சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக வருகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி […]
Continue reading …