
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லண்டனில் “எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், அல்லது நானே அரசுடைமையாக்கி தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், ‘லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகான பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆண்டு பொதுத்தேர்வுகள் நடந்து முடியவுள்ள நிலையில் விரைவில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் அனைத்து […]
Continue reading …
வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் தன் சொந்த மகனை தந்தையே துள்ளத் துடிக்க கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலுள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 25 வயதான மகன் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுக்கும் […]
Continue reading …
கே.எஸ்.அழகிரி அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீட்டு வாடகை உள்பட வீட்டு செலவுக்கு தனது நண்பர்கள் கொடுத்து உதவுகின்றனர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது “50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை எம்எல்ஏ, ஒருமுறை எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் […]
Continue reading …
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலாஷேத்ரா விகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன்னுக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஹரி பத்மன் உள்பட நான்கு பேர் மீது சென்னையிலுள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி […]
Continue reading …
துணை ஜெயிலர் பணியிடங்களை நிரப்புபவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சிறைத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சிறைத்துறையில் காவல் அதிகாரிகள், சமையாளாளர்கள், உதவியாளர்கள் என பல்வேறு பணிகளில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வபோது சிறைத்துறையில் காலியாகும் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நிரப்பப்பட்டுகின்றன. அவ்வகையில் தற்போது தமிழ்நாடு முழுதும் சிறைச்சாலைகளில் 59 துணை ஜெயிலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை ஜெயிலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி 59 துணை ஜெயிலர் […]
Continue reading …
பாஜக நிர்வாகி செல்வகுமார், செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக நிர்வாகி செல்வகுமார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருக்கும் செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …
சிறுகுறு நிறுவனங்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி சிறுகுறு நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு சிறு குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்களது செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மின்வெட்டால் தொழில் முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் இனிமேல் வெயில் தான், மழைக்கு வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 12 முதல் அதாவது இன்று முதல் ஏப்ரல் 15 வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை […]
Continue reading …
தமிழ் புத்தாண்டு சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதாலும் அடுத்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் சென்னையில் பணிபுரிந்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகை […]
Continue reading …