Home » Archives by category » தமிழகம் (Page 184)

செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

Comments Off on செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

செவிலியர் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரையடுத்த வற்றாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி சூர்யா (32). இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற ஒரு மகன்கள். சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறு பாட்டால் தகராறு எழுந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த […]

Continue reading …

முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

Comments Off on முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் ரவி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக ஆளும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. […]

Continue reading …

வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுதும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் […]

Continue reading …

மக்கள் நீதி மய்யம் கேள்வி!

Comments Off on மக்கள் நீதி மய்யம் கேள்வி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா மக்களை பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள மத்திய அரசு முயல்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் என ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மக்கள் நீதி மய்யம் இதைப் பார்க்கிறது. பல்வேறு […]

Continue reading …

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

Comments Off on தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழக மீனவர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 10கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, தமிழக […]

Continue reading …

மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிக்காக கோரிக்கை!

Comments Off on மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிக்காக கோரிக்கை!

தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி 300-க்கும் அதிகமான பாதிப்புகளும் சென்னையில் மட்டும் 100க்கும் அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு […]

Continue reading …

ஆளுநரின் ரம்மி தடைக்கான விளக்கம்!

Comments Off on ஆளுநரின் ரம்மி தடைக்கான விளக்கம்!

ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு விளக்கமளித்துள்ளார். ஆனால் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் மசோதா தடை மசோதா கடந்தாண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்திருந்தார். இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு […]

Continue reading …

கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

Comments Off on கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

சென்னை பல்லாவரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 2 நாள் சுற்றுப்பயண தென்மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரமர் மோடி. இன்று சென்னைக்கு விமான நிலைய புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு […]

Continue reading …

பாதிரியார் மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

Comments Off on பாதிரியார் மீது மேலும் ஒரு பாலியல் புகார்!

சமீபத்தில் கன்னியாகுமரி பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், மேலும் ஒரு கல்லூரி மாணவி பாதிரியார் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதை அடுத்து அவர் மீது ஆறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோ கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றி வந்தார். இளம்பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் பழகி ஆபாசமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் செய்திகள் […]

Continue reading …

அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

Comments Off on அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

இன்று காலை காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான் இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தேன் என கூறியுள்ளார். காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் என்பதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]

Continue reading …