
எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதும் 1500 என்ற கணக்கில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது ஐயாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற […]
Continue reading …
பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள அவர் “தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்’’- என்று பேசியுள்ளார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அங்கு, ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் […]
Continue reading …
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரொனா தொற்று குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. இதையடுத்து, கொரோனா தொற்றைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் வேண்டி, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. […]
Continue reading …
காங்கிரஸ் கட்சி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை – கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தமிழக வரும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் […]
Continue reading …
தமிழக அரசு அம்பாசமுத்திர நகரில் விசாரணை கைதியின் பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு அமுதா என்ற அதிகாரியை நியமனம் செய்துள்ளது. காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் காவல்துறையினரால் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல் புடுங்கிய புகார் குறித்து விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா என்பவரை தமிழக அரசு […]
Continue reading …
தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை மண்டல ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்கள் நிர்வாகிகள் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் […]
Continue reading …
பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக கட்சி அரசியல் மாயையில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் 7ம் தேதியான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு […]
Continue reading …
கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன் மனைவி திவ்யா சென்னை போலீஸ் கமிஷனரிடம், எனது கணவரை பழிவாங்கவும் அவரது நல்ல பெயரை கெடுக்கவும் அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இப்புகாரில் அவர் தனது கணவருடன் பணியாற்றிய இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பெயரில்தான் முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளார். மூத்த பேராசிரியர்கள் தனது கணவரை பாராட்டியதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அந்த இரண்டு பெண் ஆசிரியைகள் முன்னாள் மாணவியை தூண்டி விட்டு […]
Continue reading …
ஏற்கனவே அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை […]
Continue reading …