Home » Archives by category » தமிழகம் (Page 187)

சிலிண்டர் விலை ரூ.76 குறைவு!

Comments Off on சிலிண்டர் விலை ரூ.76 குறைவு!

மாதம் 1ம் தேதியானால் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாவது வழக்கமாகி விட்டது. அவ்வகையில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2,268 என விற்பனையாகி வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் இன்று முதல் 76 குறைந்து 2012 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்களுக்கு உபயோகப்படுத்தப்படும் […]

Continue reading …

லாரி உரிமையாளர் போராட்டம்!

Comments Off on லாரி உரிமையாளர் போராட்டம்!

இன்று தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில், 15 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டண […]

Continue reading …

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

Comments Off on கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்!

ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த ஷர்மிளாதான். இவர் பேருந்தை அனாயசமாக வளைத்து ஓட்டுவதில் வல்லவர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது. இதுபற்றி ஷர்மிளா கூறும்போது, “எனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்ததேன். தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கேன். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி […]

Continue reading …

மதுரை காமராஜர் பல்கலை மாணவி மரணம்!

Comments Off on மதுரை காமராஜர் பல்கலை மாணவி மரணம்!

விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவி திடீரென மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேனியை சேர்ந்த 24 வயது மாணவி மகேஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எட் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். நேற்று திடீரென அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாடியிலிருந்து அவர் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் […]

Continue reading …

கலாஷேத்ரா கல்லூரிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு..!

Comments Off on கலாஷேத்ரா கல்லூரிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு..!

மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்பம் கொடுத்ததாக பேராசிரியர்கள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய மகளிர் ஆணைய தலைவர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பாலியல் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்!

கடந்த 9 நாட்களாக “70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் விஜய்சேதுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது […]

Continue reading …

நாளை முதல் கட்டாய முகக்கவசம்!

Comments Off on நாளை முதல் கட்டாய முகக்கவசம்!

தமிழ்நாட்டில் கொரோனாவின் 3ம் அலையின் போது, உருமாறிய ஓமைக்ரான் அதிமாக பரவியது. கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே தொற்று இருந்தது. ஆனால் தற்போது படிப்படியாக உயர்ந்து 100ஐ தாண்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க […]

Continue reading …

ஆளுனர் மாளிகை செலவு குறித்து அமைச்சர் பிடிஆர்..!

Comments Off on ஆளுனர் மாளிகை செலவு குறித்து அமைச்சர் பிடிஆர்..!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையின் செலவு ஐம்பது லட்சமாக இருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அது 5 கோடியாக மாறி உள்ளது என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு 2018 -19ம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அந்த தொகையை ஆய்வு செய்தால் ரூபாய் ஐந்து கோடியில் நான்கு கோடியை அட்சயபாத்திரம் அமைப்பில் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள ஒரு கோடி ஆளுநர் மாளிகையில் கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு […]

Continue reading …

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது!

Comments Off on அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது!

எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக முடிந்தது. இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார். இதனால், அவரது அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு […]

Continue reading …

அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? காயத்ரி ரகுராம் கேள்வி

Comments Off on அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? காயத்ரி ரகுராம் கேள்வி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தற்போது அண்ணாமலை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். நேற்று அமித்ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போதும் பாஜக […]

Continue reading …