
பவானி ஆற்றில் தலையில்லாத உடல் ஒன்று மிதந்து வந்துள்ளதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியிலுள்ள பவானி ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தலை இல்லாத ஒரு உடல் மிதந்து வந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் தலையில்லாத அந்த உடலை கைப்பற்றியது. அது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் மற்றும் […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 29.11.2022ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது! பணியிட […]
Continue reading …
மத்திய அரசு ஆதார் கார்டுடன் பாண் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்த, வருமான வரித்துறை பலவேறு கால கட்டங்களாக மக்களுக்கு அவகாசம் வழங்கி வருகிறது. கடைசியாக மார்ச் 21ம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்றும், இதைச் செய்யாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்காதவர்கள் […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் காணாமல் போனார். அவரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த ஜெகன்ஸ்ரீ என்ற தனியார் கல்லூரி மாணவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தனர். ஜெகனின் நண்பர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவர்கள் தான் […]
Continue reading …
“பிக்பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆன்லைன் ரம்மியை விட மோசமானது டாஸ்மாக், அதை மூடுங்கள்” என்று பதிவிட்டள்ளார். இதுவரையிலும் ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. “ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது, எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள். குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம், இக்கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு எழுக்காதீர்கள். உங்களால் தாங்கிக் கொள்ள […]
Continue reading …
சுற்றுலா பயணிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய், சிறியவர்களுக்கு பத்து ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றும் வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் சிறியவர்களுக்கு 25 என்றும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
Continue reading …
திருமண விழா ஒன்றில், “அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் இருக்கிறார்கள். நான் இல்லாவிட்டால் இன்னொரு தொண்டர் இந்த கட்சியை வழிநடத்துவார்” என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், “ஐம்பது ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான். டெல்டா விவசாயிகள் பாதுகாக்கப்பட்டது அதிமுக அரசில்தான். அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் உள்ளனர் என்றால் இந்த பழனிச்சாமி இல்லை என்றால் யாராவது […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஓரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றுள்ளதில் முறைகேடு நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி, அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்சர் உள்ளிட்ட 11 வகைப் பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை மாதம் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாதா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் அமலாக்கம் செய்ய உள்ள நிலையில் யாருக்கெல்லாம் இத்திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
சசிகலா சட்டமன்றத்தில் ஏற்படும் மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்று கூற முடியாது என்று கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை நேற்று சட்டமன்றத்தில் வரவேற்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சசிகலா சட்டமன்றத்தில் “மக்களுக்காக மக்களின் பிரச்சனைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களின் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம், அவர் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு நான் […]
Continue reading …