Home » Archives by category » தமிழகம் (Page 191)

அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்தவர் யார்?

Comments Off on அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்தவர் யார்?

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர் அனுமதியின்றி கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார். உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர். பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார். இதுகுறித்து, ஊழியர்கள் […]

Continue reading …

வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்!

Comments Off on வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்!

கரூர் மாவட்டத்தில் வாய்க்காலில் செத்துக்கிடக்கும் லட்சக்கணக்கான மீன்கள் துர்நாற்றம் அடித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் ஓரத்தில் பாயும் தென்கரை மருதாண்டன் வாய்க்காலில் தண்ணீர் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீர் இலாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து விட்டுக்கட்டி, சிந்தலவாடி வரை தண்ணீர் ஆங்காங்கே ஒரு அடி மற்றும் 1/2 அடி மட்டம் வரை தேங்கிய நிலையில் மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மிதக்கின்றன. […]

Continue reading …

அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி ஆரம்பம்!

Comments Off on அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி ஆரம்பம்!

வரும் 24 ஆம் தேதி அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், காசிக்கு நிகரான கோவில் என்று கூறப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான நாயனார் பதிகம் பாடிய சிறப்பு பெற்ற தலமிது. இந்த நிலையில், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே திருப்பணிகள் […]

Continue reading …

ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு!

Comments Off on ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்று தெரிகிறது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் தற்போது அவருக்கு நுரையீரல் […]

Continue reading …

முடங்கிய யூடியூப் இணையதளம்!

Comments Off on முடங்கிய யூடியூப் இணையதளம்!

சமூக வலைதளமா யூடியூப் இணையதள சேவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கிப் போனதால் பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளான யூடியூப், ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் அனாலிடிக்ஸ் ஆகியவை கடந்த சில மணி நேரங்களாக முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் இந்த சேவைகள் முடங்கி உள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ள நிலையில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு படிப்படியாக இயங்கி வருகிறது […]

Continue reading …

வானவியல் அதிசயம்! எப்போது பார்க்கலாம்?

Comments Off on வானவியல் அதிசயம்! எப்போது பார்க்கலாம்?

வானியல் நிபுணர்கள் வானில் நடக்கும் அதிசய வானவியல் நிகழ்வுகளில் ஒன்றான 5 கிரகங்களின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். விண்வெளியில் பல்வேறு நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் மிகவும் அரிதான சில வானியல் நிகழ்வுகளும் அவ்வபோது நடைபெறுகின்றன. சூரிய குடும்பத்தில் பூமியை போன்றே பெரியதும், சிறியதுமான 9 கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றின் சுற்றுவட்ட பாதையை பொறுத்து சுழலும் காலமும் மாறுபடும். இதனால் வெகு அரிதாகவே இந்த கிரங்கள் ஒரே நேர்கோட்டில் […]

Continue reading …

பாதிரியார் வழக்கில் சாட்சி பெண் மாயம்!

Comments Off on பாதிரியார் வழக்கில் சாட்சி பெண் மாயம்!

கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியார் பெனடிக் ஆன்றோ வழக்கில் விசாரணைக்கு வரவேண்டிய பெண் ஒருவர் மாயமானதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கன்னியாக்குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (27). அவர் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் மற்றும் வீடியோ காலிங் பேசியதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. பேச்சிப்பாறை பகுதியில் வசித்து வரும் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் […]

Continue reading …

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வி?

Comments Off on உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கேள்வி?

உயர்நீதிமன்ற மதுரை கிளை விருதுநகர் மாவட்டத்தில் மதுபானக்கடையை அகற்றக்கோரி தாக்கல் செய்த வழக்கில் மதுபானம் அத்தியாவசிய பொருளா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலூக்காவிலுள்ள வாகைக்குளம் கிராமத்தில் இயங்கி வருகின்ற மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுக்கடையைச் சுற்றிலும் பல வீடுகள், பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிதிது வருவதால், மோதல் ஏற்படுவதாகவும், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சிறுவர்கள், பெண்கள் […]

Continue reading …

ரயில்வே ஊழியர்களுக்கு வேலை அறிவிப்பு!

Comments Off on ரயில்வே ஊழியர்களுக்கு வேலை அறிவிப்பு!

தென்னக ரயில்வே ஓய்வு பெற்றவர் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களின் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அதாவது ஏடிவிஎம் இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வழங்கும் பணிக்காக கீழ்க்கண்ட இடங்களில் வசிக்கக்கூடிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை: மதுரை […]

Continue reading …

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Comments Off on பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். “இலங்கைக் கடற்படையினரால் இன்று (23- 3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை […]

Continue reading …