Home » Archives by category » தமிழகம் (Page 307)

இ-பாஸ் நடைமுறையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on இ-பாஸ் நடைமுறையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

இ-பாஸ் நடைமுறையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய செய்தியில், மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று பரவுவதை […]

Continue reading …

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தி குறிப்பு மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள் காட்டிய அகிம்சை வழியில் ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்திட […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,835 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,835 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 5,146 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,397 பேர் பலியாகியுள்ளனர், 2,61,459 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,13,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழகத்தில் இன்று 5,871 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on தமிழகத்தில் இன்று 5,871 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 5,633 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,14,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,278 பேர் பலியாகியுள்ளனர், 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,834 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,834 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர் பலியாகியுள்ளனர், 6,005 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,159 பேர் பலியாகியுள்ளனர், 2,50,680 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு – இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவேற்பு!

Comments Off on சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு – இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவேற்பு!

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என சட்டம் கொண்டு வரப்பட்டது. சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வமும் வரவேற்று உள்ளனர். இந்த தீர்ப்பை பற்றி இருவரும் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டது: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் […]

Continue reading …

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள்!

Comments Off on இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள்!

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல். முருகன் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் எல். முருகன் எழுதியது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமுல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. ஆனால், இப்போது […]

Continue reading …

நடிகை மீராமிதுனை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா ஆவேசமான அறிக்கை!

Comments Off on நடிகை மீராமிதுனை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா ஆவேசமான அறிக்கை!

கடந்த சில தினங்களாக நடிகை மீராமிதுன் அவருடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் பெரிய நடிகர்களை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகர்களின் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசி வருகிறார். இந்நிலையில் இதை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா கட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இயக்குனர் கூறியது: என் இனிய தமிழ் மக்களே.. வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,914 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,914 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 114 பேர் பலியாகியுள்ளனர், 6,037 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,02,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,041 பேர் பலியாகியுள்ளனர், 2,44,675 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது – 100% தேர்ச்சி!

Comments Off on #BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது – 100% தேர்ச்சி!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொது கொரோனா காரணத்தினால் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்தது. தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு. மாணவர்கள் http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Continue reading …