
சசிகலா தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின் ஒப்பற்ற சாதனையாக இன்றைக்கு பார்க்க முடிகிறது. நமது நாட்டை சுற்றி சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை ஆட்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டிலேயே தண்ணீர் தர […]
Continue reading …
“இது மரணம் அல்ல… சட்டக் கொலை…” ✦ 33 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சட்ட போராட்டப் பயணம் சாந்தன் சாவை பார்க்கவா? ✦ விடுதலை, விடுதலை என்று போராடி சாந்தனின் சாவைத்தான் இன்று பார்த்துள்ளோம் ✦ பொதுசிறையில் இருந்து விடுதலையாகி, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளார்கள், அதற்காகவா போராடினார்கள் ? ✦ சாந்தனின் கடைசி விருப்பம் அவரது தாயை பார்க்க வேண்டும் என்பது, அதைக் கூட நிறைவேற்றவில்லை ✦ சாந்தனுடைய இறப்பு, திரைப்படங்களில் வரக்கூடிய உச்சகட்ட காட்சியைப் போல உள்ளது; […]
Continue reading …
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம். திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்பு. தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல். ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில கலைப் […]
Continue reading …
வணிக நிலுவைக் கடன்களை விரைந்து வசூலிக்க ஏதுவாக கொண்டுவரப்பட்ட ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஈரோடு ஜவுளித் துறையினர் போராட்டம் 50,000 விசைத்தறிகள் இன்று ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்.
Continue reading …
பெட்டி, பெட்டியாக போதை பொருட்கள் பறிமுதல், கஞ்சா விற்றவரும் சிக்கினார். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதை யடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் துணையுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரி பாண்டி கொடுத்த புகாரின் […]
Continue reading …
தென்காசி துணிச்சல் தம்பதிக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு. விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும்! இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்டக் காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் ஸ்டாலின் […]
Continue reading …
திருச்சியில் 3மணி மண்டபங்கள் திறப்பு: இது அனைவருக்குமான அரசு என முதல்வர் நிரூபித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது […]
Continue reading …
போலி பத்திரம் மூலம் ஆதி திராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு. தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கீழக்கடையம் புதுக்காலனியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடையம் ஒன்றியம், கீழக்கடையம் பகுதி 1 கிராமம் சர்வே எண் 197-27ல் எங்கள் பகுதி மக்கள் 25க்கும் மேற்பட்டேர்ருக்கு ஆதி திராவிட நலத்துறை மூலம் […]
Continue reading …
திமுக ஆட்சியில்தான் கிராமப்புறங்களில் மின்சாரம், சாலை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேச்சு. தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில்தான் கிராமங்களில் மின்சாரம், சாலைகள், பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே ஆர்.பெரிய கருப்பன் கூறினார். முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி சார்பில் 89 ஆவது […]
Continue reading …
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கான சிறப்பு பயிலரங்கம். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது. ஹோலிகிராஸ் கல்லூரியின் முதுகலை புனர்வாழ்வு அறிவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை வாழ்நாள் வரை கற்றல் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் சார்பில், நடைபெற்ற இந்த சிறப்பு பயிலரங்கில், மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கையர்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தின்கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலை வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால […]
Continue reading …