இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் இலங்கை மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் […]
Continue reading …டெல்லி அரசு ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்று அறிவித்திருந்தது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான். தற்போது மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 10 லட்சம் […]
Continue reading …டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சமீபத்தில் விசாரணை கைதிகள் சிலர் காவல் நிலையத்தில் உயிரிழந்தனர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இருவர் […]
Continue reading …தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]
Continue reading …உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் […]
Continue reading …டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான மின்சார பேருந்துகளுக்கான டெண்டரை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய நகரங்களில் மின்சார ஏசி பேருந்துகள், மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள், சாதாரண சாதாரண என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 460 பேருந்துகளுக்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது. இந்த டெண்டரில் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டர் கிடைத்துள்ளதாக தகவல் […]
Continue reading …பல்கலைக்கழகக் மானிய குழு தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிறுவனம் அறிவுறித்தியுள்ளது. இந்த அறிவிப்புகள் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக வல்லுநர் குழுவை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் யுஜிசி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
Continue reading …அன்புமணி ராமதாஸ் நடிகர் அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரங்களில் நடிக்க மறுத்ததற்காக பாராட்டியுள்ளார். புகையிலை நிறுவனம் பெருந்தொகையை ஊதியமாக விளம்பரத்தில் நடிப்பதற்கு தருதாக சொல்லியும், சமூகக்கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி பாராட்டியுள்ளார். புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் […]
Continue reading …புதுவை : வி.எச்.என். செந்திகுமார நாடார் தன்னாட்சி கல்லூரியில் “தாவரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் துறை பேராசிரியர். அ. தினகர ராவுக்கு தாவர அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக தாவர ஆராய்ச்சிக்கான சங்கத்தின் (SPR) மதிப்புமிக்க ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் அ.தினகர ராவ் இருபதாண்டுகளுக்கும் மேலாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தாவர […]
Continue reading …ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது, அதன்படி தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே, ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 26 வரை […]
Continue reading …